தொழில்நுட்பத்தை வேறலெவலில் பயன்படுத்தும் இந்தியர்கள்: ஆன்லைனில் நிச்சயதார்த்தம்.! அடடே.!
தற்சமயம் இணையதளத்தில் வைரலாகி வரும் வீடியோவைப் பற்றிதான் இந்த செய்தி தொகுப்பு, அதன்படி வீடீயோ கான்ஃபரன்சிங் முறையில் இளைம்ஜோடிகளுக்கு திருமண நிச்சயதாதர்த்தம் நடைபெற்ற வீடியோ தான் இப்போது வைரலாகி உள்ளது.

இப்போது உள்ள தொழில்நுட்பம் கண்டிப்பாக பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும், பின்பு வரும் காலத்தில் இதைவிட தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மிகவும் அதிகமாகவே இருக்கும்.

இந்தியர்களை அடித்துக்கொள்ளே ஆளே இல்லை
தொழில்நுட்பத்தை மிகவும் நுட்பமாக பயன்படுத்துவதில் இந்தியர்களை அடித்துக்கொள்ளே ஆளே இல்லை, அதற்குஒரு உதாரணமான தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதைப் பற்றி விரிவாக பாரப்போம்.

நிச்சியதார்தம்
வெளிநாடுகளில் வசிக்கும் பெண் ஒருவருக்கும், இளைஞர் ஒருவருக்கும் திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளனர், திருமணத்திற்கு முன்னதாக நிச்சியதார்த்த விழாவிற்காக பெற்றோர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் இருவராலும் நேரில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை உருவாக, பையனுக்கும்,பெண்ணுக்கும் ஆன்லைனிலேயே நிச்சியதார்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

வீடியோ காலில்
எனவே ஒரு மொபைலில் வீடியோ காலில் பெண் இருக்க மற்றொரு ஸ்மார்ட்போனில் வீடியோ காலில் இளைஞர் இருக்க இருவருக்கும் முறைப்படி சடங்கு சம்பிரதாயங்கள் செய்யப்பட்டது, மேலும் பெண்ணுக்கு நெற்றியில் குங்குமம் வைப்பதற்கு பதிலாக, செல்போனில் வைத்துள்ளனர் உறவினர்கள்.
செல்போனுக்கு அதை அணிவித்தனர்
அதேபோல் பெண்ணுக்கு தலையில் பட்டு துணியை போடுவதற்கு பதிலாக, செல்போனுக்கு அதை அணிவித்தனர். இந்த அட்டகாசமான நிச்சியதார்த்த காட்சிகள் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மணமகன் மற்றும் மணமகள்
குறிப்பாக மணமகன் மற்றும் மணமகள் வெளிநாடுகளில் பணியாற்றும் சூழலில் விசா நடைமுறை காரணங்களுக்காகஊர் திரும்ப இயலாத சூழலில் இதுபோன்ற ஆன்லைன் சடங்குகள் அதிகமாக நடப்பதாக கூறுகின்றனர்.
மகேஷ்
மேலும் ஆந்திராவின் கிருஷ்ணா மற்றும் கோதாவரி பகுதிகளில் இதுபோன்ற ஆன்லைன் சடங்குகள் அதிகம் நடப்பதாக பிகில் திரைப்படத்தை, தெலுங்கில் விநியோகம் செய்த மகேஷ் என்பவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications