Just In
- 23 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 1 day ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 1 day ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 1 day ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
12 நாட்கள் தங்குகிறேன்.. தெருத் தெருவாக மக்களை சந்திக்கப் போகிறேன்.. ஈரோட்டில் சீமான் அறிவிப்பு!
- Movies
காதலுக்கு வயசெல்லாம் கிடையாது... சின்ன பையனுடன் காதலா என்ற கேள்விக்கு மாஸ்டர் நாயகியின் க்யூட் பதில்
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் எப்போதும் வெற்றிபெறும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம்..உங்க ராசி இதுல இருக்கா
- Sports
இதெல்லாம் ஒரு பிட்ச்-ஆ? பிசிசிஐ மீது பாய்ந்த ஹர்திக் பாண்ட்யா.. 2வது டி20 வெற்றி குறித்து அதிருப்தி
- Automobiles
டொயோட்டா காரை அப்படியே காப்பி அடித்து புதிய காரை உருவாக்கும் மாருதி! பெரிய குடும்பங்களுக்காக சூப்பர் முயற்சி!
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ஆன்லைன் வகுப்பிற்கு தடை சொன்ன அமைச்சர்! முடிவில் திடீர் திருப்பம்!
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்பிற்குத் தடை எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்த சில மணி நேரத்திலேயே, ஆன்லைனில் வகுப்பு எடுப்பதைத் தடுக்க முடியாது என்று திடீரென தனது அறிவிப்பை மாற்றி அறிவித்திருக்கிறார்.

கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நேரத்திலிருந்து தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெறாத நிலையில் 1ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகத் தமிழக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து கே=ஜூன் 1 ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகியது.

இந்நிலையில் இந்த கல்வியாண்டில் வரும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படாது என்பது தற்பொழுது உறுதியாகி உள்ளது. பள்ளிகள் ஆகஸ்ட் மாதத்தில் தான் திறக்கக் கூடும் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கிறது. ஜூலையில் பள்ளிகள் திறக்கப்படுமா என்பதற்கான அறிவிப்பையும் தமிழக அரசு இன்னும் வெளியிடவில்லை. தமிழக அரசு அதன் அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே உறுதியாக நமக்கு தெரியவரும்.

இந்த நிலையில் ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கும் தனியார்ப் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் எச்சரித்தார். பள்ளிக்கல்வித்துறை சார்பாகப் புதிதாக வகுப்பறையை நோக்கி என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முன்னதாக சென்னை, திருவள்ளூரில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் தற்பொழுது தமிழகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது என்று தெரிவித்தார்.

தனியார் பள்ளிகள் ஆன்லைனில் வகுப்புகள் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுதும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஊரடங்கில் கல்விக் கட்டணத்தை வசூலிக்கும் தனியார்ப் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய சிறிது நேரத்திலேயே தனது நிலைப்பாட்டை அமைச்சர் மாற்றி, ஆன்லைனில் வகுப்பு எடுப்பதைத் தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470