ஆன்லைனில் பிச்சை எடுத்த பெண் கைது: நடந்தது இதுதான்.!
ஐக்கிய அரப எமிராட்ஸை சேர்ந்த பெண் ஒருவர், தனது திருமண வாழ்கையில் ஏற்பட்ட பிரச்சணையால் கனவரை பிரிந்தார், பின்பு தனது குழந்தைகளுக்கு உதவுமாறு சமூக வலைதளங்களில் பலரிடம் உதவி கேட்டுள்ளார்.
அவர் உதவி கேட்ட வெறும் 17நாட்களில் ரூ.34 லட்சம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமனம் தோல்வியடைந்து
இருந்தபோதிலும் இந்த பெண்மனிக்கு ஒரு பெரிய பிரச்சனை மற்றும் ஆப்பு வருமென்று அப்போது தெரியவில்லை, பேஸ்புக் டிவிட்டர் இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் தனது திருமனம் தோல்வியடைந்து விட்டது எனறும், தன்னையும் தனது குழந்தைகளையும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ரூ.34 லட்சம்
குறிப்பாக தகது குழந்தைகளை வழி நடத்தி செல்ல பண உதிவு செய்யுங்கள் என்று தான் சமூகவலைதளத்தில் கேட்டிருந்தார், இது குறித்து துபாய் போலிஸ் அதிகாரிகள் கூறுகையில், இந்த பெண் பேஸ்புக்,டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் ஏமாற்றி ரூ.34 லட்சம் சம்பாதித்ததாக கூறியுள்ளனர்.

புலனாய்வு அதிகாரி
பின்பு இதுகுறித்து துபாய் போலீஸீன் புலனாய்வு அதிகாரி Brigadier Jamal Al Salem Al Jallaf என்பவர் கூறுகையில், இந்த பெண்மணி பல ஆன்லைன் சமூக வலைதளங்களில் கணக்குகளை துவங்கி, அதில் தனது குழந்தைகள் என புகைப்படங்களை போட்டு, அதன் மூலம் பிச்சை எடுத்துள்ளார்.

கிரைம் பிளாட்பார்ம்
மேலும் கனவருடன் ஏற்பட்ட சண்டையால் விவாகரத்து செய்ததாகவும், தனது குழந்தைகள் தன்னுடன் தான் இருக்கிறார்கள் என்று அந்த பெண் கூறியுள்ளார். ஆனால் அந்த பெண்ணின் கணவரோ தனது மனைவியும் தானும் பிரிந்து வாழ்வதாகவும், குழந்தைகள் தன்னுடன் இருப்பதாகவும் நீருபித்துள்ளார். குறிப்பாக இதை கிரைம் பிளாட்பார்ம் மூலம் கூறியுள்ளார்..

துபாய் போலீசார் கைது செய்துள்ளனர்
பின்பு அவரின் குழந்தைகளின் புகைப்படத்தை வைத்து,பிச்சை எடுப்பதாகவும், அந்த பெண்ணின் கணவரின் நண்பர்களும் உறிவினர்களும் கூறியுள்ளனர். அதன்பின்பு கணவர் கூறிய ஆதராங்களை வைத்தே துபாய் போலீசார் கைது செய்துள்ளனர்.

கொடைத் தன்மையை அறிந்து ஏமாற்றுகிறார்கள்
இந்த பெண்மணி கணவரை குறை கூறி ஒரு சிம்பதியை ஏற்படுத்துவதன் மூலம் 17நாட்களில் 34லட்சம் வரையில் சம்பாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இது குறித்து போலீஸ் கூறுகையில் ஆன்லைன் வலைதளங்களில்
தொடர்ந்து இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. மேலும் வறுமையில் இருக்கிறோம் என்று மக்களின் கொடைத் தன்மையை அறிந்து ஏமாற்றுகிறார்கள் என்று கூறுயுள்ளனர்.


Click it and Unblock the Notifications