ஒன் ப்ளஸ் நிறுவனம் புதிய மென்பொருளை வெளியிட்டுள்ளது
மைக்ரேமேக்ஸ் நிறுவனத்துடன் மென்பொருள் குறித்த சர்ச்சையால் நீதிமன்றம் சென்ற சீன நிறுவனமான ஒன்ப்ளஸ் தனது சொந்த மென்பொருளை வெளியிட்டுள்ளது. முழுமையான மென்பொருளாக இல்லாத நிலையில் இது மென்பொருளின் முன்னோட்டமாகவே உள்ளது.
[எஸ்எம்எஸ் மூலம் ரயில் பயனச்சீட்டு முன்பதிவு செய்வது எப்படி]
இது மென்பொருளின் முன்னோட்டம் தான் விரைவில் இது மேலும் மேம்படுத்தப்பட்டு புதிய அப்டேட் மற்றும் பல அம்சங்கள் சேர்க்கப்படும் என்று ஒன்ப்ளஸ் இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்ப்ளஸ் மொபைல்களில் புதிய மென்பொருளை பயன்படுத்த இங்கு க்ளிக் செய்யவும். கஸ்டம் ராம் ப்ளாஷ் செய்யும் போது உங்களது மொபைல் வாரன்டி எல்லையை மீறிவிடும்.அதன் பின் தொடர்வது உங்களது சொந்த விருப்பங்கலை பொருத்தது.

இன்னும் சில மாதங்களில் கஸ்டம் ராம் எதிர்பார்க்கப்படுகின்றது. சீன நிறுவனம் புதிய மென்பொருளை உருவாக்க காரணமாக மைக்ரோமேக்ஸ் தொடர்ந்த வழக்கு அமைந்தது. மைக்ரோமேக்ஸ் நிறுவனம் சைனோஜென் மெந்பொருளை பயன்படுத்தும் முழு உரிமையை பெற்றுள்ளது, இதன் காரணமாக ஒன் ப்ளஸ் அதே மெந்பொருளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
[சென்னையில் பயன்படுத்த தகுந்த சிறந்த ஸ்மார்ட்போன்கள்]
இந்த விவகாரம் கடந்த மாதம் நடைபெற்றதோடு இந்தியாவில் ஒன் ப்ளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு தடை விதித்து தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தியாவில் விற்பனையை தொடர்ந்து மேற்கொள்ள ஒன் ப்ளஸ் தனது சொந்த ஆன்டிராய்டு வகை மென்பொருளை தயாரித்து வருகின்றது.


Click it and Unblock the Notifications








