பல ஆண்டுகளாக பயனர்களின் விவரங்களை கசியவிட்ட ஒன்பிளஸ் நிறுவனம்.! சர்ச்சையில் சிக்கியது.!
ஆனால் இந்த பிழையை மே மாதம் துவகத்தில் தெரியப்படுத்திவிட்டு இதனை சரி செய்யும் முயற்சிகளை மேற்கொண்டது, ஷாட் ஆன் ஒன்பிளஸஸ் செயலியை பயனர்கள் வால்பேப்பர்ஸ் சென்று இயக்கலாம்.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும், குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் புதிய மென்பொருள் மற்றும் வன்பொருள் தொழில்நுட்பத்துடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது, அது என்னவென்றால் ஒன்பிளஸ் சாதனங்களில் ஷாட் ஆன் ஒன்பிளஸ் (Shot on OnePlus) என்ற செயலி பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது. இந்த செயலி மூலம்
பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகள் கசிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷாட் ஆன் ஒன்பிளஸ்
குறிப்பாக இந்த ஷாட் ஆன் ஒன்பிளஸ் செயலியில் பயனர்கள் எடுக்கும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும், பின்பு பதிவேற்றம் செய்த புகைப்படங்களை தேர்வு செய்து அவற்றை சர்வதேச அளவில் வால்பேப்பர்களாக வெளியிடுவதை ஒன்பிளஸ் நிறுவனம் வாடிக்கையாக கொண்டிருக்கிறது.

சர்வெர் மற்றும் ஷாட் ஆன்
அன்மையில் ஒன்பிளஸ் சர்வெர் மற்றும் ஷாட் ஆன் ஒன்பிளஸ் செயலிக்கு இடையேயாக லின்க் மூலம் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகள் வெளியானது கண்டறியப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஷாட் ஆன் ஒன்பிளஸ் செயலியை
பயன்படுத்தியவர்களின் மின்னஞ்சல் விவரங்கள் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மின்னஞ்சல் முகவரி
ஆனால் இந்த பிழையை மே மாதம் துவகத்தில் தெரியப்படுத்திவிட்டு இதனை சரி செய்யும் முயற்சிகளை மேற்கொண்டது, ஷாட் ஆன் ஒன்பிளஸஸ் செயலியை பயனர்கள் வால்பேப்பர்ஸ் சென்று இயக்கலாம்.
இதனை இயக்க பயனர்கள் தங்களின் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி அவரவர் எடுத்த புகைப்படங்களை பதிவேற்றம்; செய்யலாம்.

ஏ.பி.ஐ
மேலும் புகைப்படங்கள் தேர்வு செய்த பின்பு ஒன்பிளஸ் நிறுவனம் அவற்றை ஏ.பி.ஐ மூலம் பொதுவெளியில் வெளியிடும், இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் பயன்படுத்தும் ஏ.பி.ஐ கொண்டு மற்றவர்களுக்கும் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகளை பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.

open.oneplus.net எனும் இணைய முகவரியில்..
இந்த ஏ.பி.ஐ open.oneplus.net எனும் இணைய முகவரியில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது, பின்பு இந்த பிழை எப்போது முதல் இருந்தது என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை, எனினும் இந்த பிழை சேவை துவங்கப்பட்டது முதலே இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சத்தமில்லாமல் சில மாற்றங்களையும் ஒன்பிளஸ் மேற்கொண்டு இருக்கிறது
இருந்போதிலும் ஒன்பிளஸ் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மிக கவனமாக ஆய்வு செய்வோம் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்பு இதைத் தொடர்ந்து ஏ.பி.ஐ-களில் சத்தமில்லாமல் சில மாற்றங்களையும் ஒன்பிளஸ் மேற்கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பயனர் விவரங்களுக்கு அச்சுறுத்தல்
ஆனால் புதிய பிழை கண்டறியப்பட்டதன் மூலம் பயனர் விவரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக இதுவரை எவ்வித தகவலும் இல்லை.


Click it and Unblock the Notifications