ரூ.87 லட்சம் மதிப்புள்ள தொலைப்பேசிகளை திருடிய நபர் கைது.!

மே மாதத்தில் செக்டர் 12 இல் இருக்கும் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் திரட்டு கும்பல் ஒன்று தன் கைவரிசையைக் காட்டியுள்ளது. அது தொடர்பாக குறுகிறாம் போலீசார் 35 வயதுடைய ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

By Sharath
|

மே மாதத்தில் செக்டர் 12 இல் இருக்கும் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் திரட்டு கும்பல் ஒன்று தன் கைவரிசையைக் காட்டியுள்ளது. அது தொடர்பாக குறுகிறாம் போலீசார் 35 வயதுடைய ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

ரூ.87 லட்சம் மதிப்புள்ள தொலைப்பேசிகளை திருடிய நபர் கைது.!

இவரிடமிருந்து 4,239 கையடக்க தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல் போன்களின் மொத்த மதிப்பு 87 லட்சம் ஆகும்.

இந்தத் திருட்டு கும்பலின் தலைவன் ரமேஷ் அலியாஸ் பாபு போலீசாரால் நேற்று கைதுசெய்யப்பட்டார். இவர்கள் திருடிய மொபைல் போன்களை திருட்டுத்தனமாக நேபால் எல்லைகளில் விற்பனை செய்தது தற்பொழுது தெரிய வந்துள்ளது.

ரமேஷ் அலியாஸ் பாபுவின் கும்பலைத் தனி தனியா விசாரித்தது குறுகிறாம் காவல் துறை, இந்தக் கும்பல் இந்தியாவில் பல இடங்களில் தங்களின் கைவரிசையைக் காட்டியுள்ளது முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் வெறும் மொபைல் போன்களை மட்டும் திருடி நேபால் எல்லையில் விற்கவில்லை, வாஷிங் மெஷின், டிவி போன்ற அனைத்து விதமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களையும் திருடி விடறது தற்பொழுது தெரியவந்துள்ளது.

பீகார் ஐ சேர்ந்த ரமேஷ் இதற்கு முன்பு நிலுவையில் இருக்கும் 27 திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரமேஷ் உடன் சேர்த்து அந்தக் கும்பலை சேர்ந்த மூன்று பேரை காவல் துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர்.

Best Mobiles in India

English summary
One held for stealing phones worth Rs 87 lakh : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X