அழகானவைகள் மேல் ஆசை தானாக வரும். அந்த வகையில் பார்க்கும் போது நிலா மீது நாம் அனைவருக்கும் ஆசை வந்ததில் எந்தவொரு அதிசயமும் இல்லை..!
தீயாக வேலை செய்யும் 20 வயசு..!
ஆசை எப்போதும் தன்னை சுருக்கி கொள்ளாது, பெரிதாகிக் கொண்டே போகும். அப்படியாக மனித இனத்தின் மிக பெரிய ஆசையாகிப் போனது - நிலா. அந்த ஆசை தான் மனிதனை நிலாவை நோக்கி பயணிக்க தூண்டியது எனலாம், அந்த காலத்தில் மனிதன் எடுத்த வைத்த மாபெரும் அடி அது..!
புறப்பட்டனர் :
நீல் ஆம்ஸ்ட்ராங் உடன் எட்வின் "பஸ்" ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் கொல்லின்ஸ் ஆகிய மூவரும் 1969-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி பூமியில் இருந்து நிலாவிற்கு புறப்பட்டனர்.
அடைந்தனர் :
சிறுது நாட்கள் கழித்து நிலாவை அடைந்தனர். சென்றடைந்த சில நாட்கள் கழித்து, நீல் ஆம்ஸ்ட்ராங் & எட்வின் "பஸ்" ஆல்ட்ரின் ஆகிய இருவர் நிலாவில் குதித்தனர்..!
முதல் மனிதர் :
நீல் ஆம்ஸ்ட்ராங், நிலாவில் காலடி எடுத்த வைத்த முதல் மனிதர்..!
வார்த்தை :
லட்சக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டு இருக்க, அந்த வார்த்தையை உதித்தார் - "மனிதனுக்கு இது ஒரு சிறிய அடி, மனித இனத்துக்கு இது ஒரு மாபெரும் பாய்ச்சல்..!"
காலடி :
மனிதன் நிலாவில் காலடி எடுத்து வைத்த அந்த வரலாற்று சிறப்பு மிக்க நாள் ஜூலை 21, 1969. அதாவது இதே நாள், 46 வருடங்களுக்கு முன்..!
உலா :
நிலாவில் 21 மணி நேரம் மற்றும் 31 நிமிடங்கள் வரை அவர்கள் கழித்தனர்.
புகைப்படங்கள் மற்றும் மண் மாதிரிகள் :
சிறுது நேரம் நிலாவில் உலாவிய நீல் புகைப்படங்கள் மற்றும் மண் மாதிரிகளை சேகரித்தார்..!
ப்ளூட்டோ வரை :
அன்று தொடங்கிய மாபெரும் அடிகள் இன்று ப்ளூட்டோ வரை நீண்டுள்ளது என்பது மனித இனத்தின் மகத்தான சாதனையே ஆகும்..!