UPI Lite: சிறிய அளவிலான பணப்பரிமாற்றத்தை செய்ய புதிய வசதி-விரைவில்.!
தற்போது இந்தியாவில் யூபிஐ பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதாவது முன்னெப்போதும் இல்லாத அளவிற்குச் சமீபத்தில் UPI ஆப்ஸ்களை இந்தியர்கள் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். முக்கிய நகரங்கள் முதல் துவங்கி. உள்ளூர் சந்தைகள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் யூபிஐ மூலம் பணம் அனுப்புபவர்களுக்கு யூபிஐ லைட் என்ற அம்சத்தை என்.பி.சி.ஐ (National Payments Corporation of India) அமைப்பு அறிமுகம் செய்யவுள்ளது. குறிப்பாக இந்த யூபிஐ லைட் அம்சத்தின் மூலம் சிறிய அளவிலான பணப் பரிவரித்தனைகளை செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

இப்போது யூபிஐ சேவையை வழங்கும் சில நிறுவனங்களுக்கு யூபிஐ லைட் தேர்வையும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இந்த யூபிஐ லைட்டில் வாலட் தரப்படும் என்றும், பின்பு பயனர்கள் வங்கி கணக்கிலிருந்து வாலட்டில் பணத்தை வைத்துக்கொண்டு சிறய
அளவிலான பரிவர்த்தனைகளை செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. கண்டிப்பாக இந்த சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

குறிப்பாக யூபிஐ லைட் அம்சத்தில் ரூ.200 முதல் ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைகளை செய்யமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிஜிட்டல் பேமெண்ட சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்கு சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை தற்போது அதிகரித்து வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

பின்பு இந்த டிஜிட்டல் பேமெண்ட் துறையில் ஏற்கனவே பேடிஎம்,போன்பே, கூகுள் பே, அமேசான் பே எனப் பல நிறுவனங்கள் இருக்கும் நிலையில்டாடா குழுமம் இந்த துறையில் புதிதாக இறங்குவதாக அறிவித்துள்ளது. அதாவது உப்பு முதல் விமானம் வரை பல பொருள்களை உற்பத்திசெய்துவரும் டாடா நிறுவனம் டிஜிட்டல் பேமெண்ட் துறையில் அறிமுகமாவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

டிஜிட்டல் பேமெண்ட்-ஐ உருவாக்க டாடா டிஜிட்டல் நிறுவனம் ஐசிஐசி வங்கியின் உதவியைப் பெற உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் UPI தளத்தின் உதவியுடன் பேமெண்ட் சேவையை அளிக்க NPCI அமைப்பிடம் ஒப்புதல் பெற டாடா குழுமம் காத்துக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

கூகுள் பே,போன்பே போன்ற நிறுவனங்கள் வங்கிகளின் உதவியுடன் தான் யூபிஐ பேமெண்ட் சேவையை அளித்து வருகிறது. இதே வழியை தான் டாடாவும் பின்பற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, இந்த மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாத துவக்கத்தில் டாடா குழுமம் தனது புதிய யூபிஐ செயலி மற்றும் சூப்பர் ஆப் டாடா நீரு-வை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இதுபோன்ற செயலிகள் மொபைல் ரீசார்ஜ்களின் தொந்தரவைக் குறைத்துள்ளன. அதாவது முன்பு மொபைல் பயனர்கள் தங்களுக்கு ரீசார்ஜ் செய்ய கடைக்குச் சென்று டாப்-அப் திட்டங்களை வாங்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது பயனர்களுக்கு எளிதான ரீசார்ஜ் வசதியை வழங்கும் போன்பே, பேடிஎம், கூகுள் பே போன்ற பல செயலிகள் உள்ளன.


Click it and Unblock the Notifications