"இனி" பேஸ்புக், ட்விட்டர் மூலம் சமையல் எரிவாயு பதிவு செய்யலாம்.!
சமூகவலைதளம் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டா்களை முன்பதிவு செய்யும் முறை வடஇந்தியாவில் சில இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு கேட்டு விண்ணப்பித்து வீட்டிற்கு வந்து சேரும் வரை பெண்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகிறார்கள், மேலும் இப்போது ஏஜென்சிகளின் டெலிபோன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு புக் செய்வதற்குள் கேஸ் தீர்ந்துவிடும் நிலைமை உள்ளது. இதையடுத்து சமூக வலைதளங்கள் மூலம் எரிவாயுவை முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இப்போது பேஸ்புக்,ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பதிவு செய்யும் புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளன.

வடஇந்தியா:
சமூகவலைதளம் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டா்களை முன்பதிவு செய்யும் முறை வடஇந்தியாவில் சில இடங்களில்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம்:
இந்த புதிய திட்டம் விரைவில் தமிழகம் உட்பட இந்திய முழுவதும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் மிக எளிமையாக சமையல் எரிவாயு சிலிண்டா்களை சமூகவலைதளம் முன்பதிவு செய்யமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள்:
வாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு இந்த சமூகவலைதளம் திட்டம் கொண்டுவரப்பட்டது என எண்ணெய் நிறுவனங்களின் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளச்சந்தை:
சமூகவலைதளம் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டா்களை முன்பதிவு செய்யும் முறை வந்தால் கள்ளச்சந்தையில் எரிவாயு சிலிண்டர் விற்கப்படுவது தடுக்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் ஆணையம்:
சமூகவலைதளம் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டா்களை முன்பதிவு செய்யும் திட்டம் பொறுத்தவரை இந்திய தகவல் ஆணையத்தின்
அதிகாரப்பூர்வ பக்கத்தின் மூலம் இந்த தகவல் வெளிவந்தது.

சமூகவலைதளம்:
பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளம் மக்களுக்கு பல்வேறு வழியில் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது, சமூகவலைதளம் மூலம்
சமையல் எரிவாயு சிலிண்டா்களை முன்பதிவு செய்யும் நடைமுறை கூடிய விரைவில் அனைத்து பகுதிகளிலும் நடைமுறைக்கு வரும்.


Click it and Unblock the Notifications