Just In
- 1 hr ago ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- 1 hr ago பழைய iPhone 13, iPhone 14 ஆஃபரை தூக்கி குப்பையில போடுங்க.. iPhone 15 Pro மீது ரூ.16,700 டிஸ்கவுண்ட் அறிவிப்பு!
- 1 hr ago ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.9000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 12 hrs ago சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
Don't Miss
- Finance எலான் மஸ்க இந்தியாவுக்கு இப்போ வரலை.. நரேந்திர மோடி அரசுக்கு ஷாக்..!!
- News செட்டில்மென்ட் பத்திரம்.. நீங்க சொத்து வாங்கறீங்களா? தான பத்திரத்தில் இது ரொம்ப மேஜர்.. அடேங்கப்பா
- Movies நடிகருடன் காதல்.. திருமணத்திற்கு முன்பே தெரிந்த உண்மை.. நிதி அகர்வால் எடுத்த அதிரடி முடிவு!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பள்ளிக்கூடமாக மாறிய whatsapp: வீட்டுப்பாடம் முடிச்சாச்சா?- படிப்பு முக்கியம் பாஸ்!
கொரோனா பரவாமல் தடுக்கும் அதேவேலையில் மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில் வாடஸ் ஆப் மூலம் பாடங்கள் தொடங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வைரஸ்-க்கு கோவிட் 19 என பெயர்
சீனா வுகான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் விலங்குகளிடம் இருந்து பரவியதாக தெரிவிக்கப்படும் வைரஸ்-க்கு கோவிட் 19 என பெயரிடப்பட்டது. இந்த வைரஸ் ஆனது சீனாவில் அதிவேகமாக பரவிய நிலையில் உலக நாடுகள் எச்சரிக்கை விடுக்கத் தொடங்கியது.
6,412 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு
இந்தியாவில் 6,412 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புகள் மற்றும் 199 இறப்புகளைப் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு உலக அளவில் வயதானவர்களுக்கு தான் அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தலைகீழாக மாறி இருக்கிறது. இது இந்தியாவில் கொரோனா தாக்குதலில் 83 சதவீதத்திற்கு குறைவானோர் 60 வயதுக்கு உட்படுத்தப்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதர்களின் நடமாட்டம் குறைந்ததால் பூமியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்!
ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு
இதையடுத்து ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உலக அளவில் வயதானவர்களுக்கு தான் அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தலைகீழாக மாறி இருக்கிறது. இது இந்தியாவில் கொரோனா தாக்குதலில் 83 சதவீதத்திற்கு குறைவானோர் 60 வயதுக்கு உட்படுத்தப்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.
பரவாமல் தடுக்க அதிகளவில் சோதனை
கொரோனா வைரஸை பரவாமல் போராட, அதிகளவில் சோதனைகள் செய்யப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதனால், நாட்டில் அதிவேகமாக கொரோனா பரவி வரும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்கு கொரோனா பரிசோதனைகளை வேகமாக செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பள்ளி கல்லூரிகளிலும் விடுமுறை
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மற்றம் மாநில அரசுகள் அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சில அரசு பள்ளிகளையும் கொரோனா தடுப்பு வார்டாக பயன்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டும் வருகிறது.
கொரோனா தனி வார்டாக பயன்படுத்த கொடுக்கலாம்
குறிப்பாக தனியார் பள்ளி கல்லூரிகளையும் விருப்பம் உள்ளவர்கள் கொரோனா தனி வார்டாக பயன்படுத்த கொடுக்கலாம் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.
படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை
இதையடுத்து பள்ளி கல்லூரி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வீடியோ கால் மூலமாக பாடங்கள் நடத்த பல பள்ளிகளும் ஏற்பாடு செய்து வருகிறது.
வாட்ஸ் ஆப் உதவியுடன் வீட்டிலேயே மாணவர்களுக்கு பாடம்
தற்போது, சென்னை கோடம்பாக்கத்தில் கில் நகரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் வாட்ஸப் மூலம் தங்கள் வகுப்புகளை தொடங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. வாட்ஸ் ஆப் உதவியுடன் வீட்டிலேயே மாணவர்கள் பள்ளி சீருடைகள் அணிந்தபடி பாடம் படிக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூகவளத்தங்களில் பரவி வருவதை காணமுடிகிறது.
வீட்டுப்பாடத்தை முடித்து புகைப்படமாக எடுத்து அனுப்பப்பட்டு வருகிறது
அதேபோல் மாணவர்களும் தங்களது வீட்டுப்பாடத்தை முடித்து புகைப்படமாக எடுத்து அனுப்பப்பட்டு வருகிறது. அதேபோல் ஒரு சில பள்ளிகளில் ஜூம் வீடியோ ஆப் பயன்படுத்தி ஒவ்வொரு பாடமும் ஒரு மணிநேரம் என்ற வீதம் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஒவ்வொரு வகுப்புகளுக்கும் 15 முதல் 30 விநாடிகள் வரை இடைவேலையும் விடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த 3 மாதத்திற்கு இதான் விலை: ரீசார்ஜ் விலை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு!
மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை
கொரோனா பரவாமல் தடுக்கும் அதேவேலையில் மாணவர்களின் படிப்பும் பாதிக்கப்படாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் காரணமாகவே பள்ளி ஆசிரியர்கள் மூலம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்படுவதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470