கடன் வழங்கும் கூகுள்- நீ தான்யா கடவுள்.!
கூகுள் நிறுவனம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கூகுள் டெஸ் என்ற செயலியை அறிமுகம் செய்தது, குறிப்பாக இந்த செயலி சில அடிப்படை சார்ந்த சேவைகளை வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் நிறுவனம் இப்போது பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்று தான் கூறவேண்டும். மேலும் இணையத்தில் புதுப்புது சேவைகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது இந்த கூகுள் நிறுவனம்.

கூகுள் சேவையில் ஜிமெயில், யு டியூப், கூகுள் பிளஸ், கூகுள் ட்ரைவ், கூகுள் மேப் போன்றவற்றை மக்கள் அதிகளவில் இப்போது பயன்படுத்தி வருகின்றனர், விரைவில் இந்நிறுவனம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் பேமண்ட்
தற்சமயம் இந்தியாவில் டிஜிட்டல் பேமண்ட் துறை மக்களிடையே அபரிமிதமான வரவேற்பைப் பெற்று வரும் நிலையில்,பேடிஎம், வாட்ஸ்ஆப், போன்ற பல நிறுவனங்கள் டிஜிட்டல் பேமெண்ட் செயலிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி நிதி சேவையை வழங்கிவருகின்றன.

முதல் இடம்:
மேலும் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள (கூகுள்) டிஜிட்டல் பேமெண்ட் வசதியானது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். அதன்படி டிஜிட்டல் பேமென்ட் துறையில் முதல் இடத்தை பிடிக்க திட்டமிட்டுள்ளது
இந்நிறுவனம்.

ஹெச்.டி.எஃப்.சி
இதற்குவேண்டி ஹெச்.டி.எஃப்.சி, ஐசிஐசிஐ, கோட்டக் மஹிந்திரா பேங்க், மற்றும் ஃபெடரல் வங்கி ஆகியவற்றுடன் இணைந்து ஒரு
ட்ரில்லயன் டாலர் இலக்குடன் டிஜிட்டல் நிதி சேவை வழங்கும் திட்டத்தை கடந்த வாரம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆவணங்கள்
இந்த கூகுள் பே செயலி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதில் கேட்கப்படும் மிகச்சில ஆவணங்களை மட்டும் வழங்கி வங்கியின் ஒப்புதல் பெற்றுவிட்டால் போதும், அடுத்த சில மணிநேரங்களில் கடன் தொகை வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது கூகுள் நிறுவனம்.

22மில்லியன்
குறிப்பாக 22மில்லியன் வாடிக்கையாளர்கள் இந்த கூகுள் பே செயலி பயன்படுத்தி வருகின்றனர், மேலும் இந்த செயலி 2000-க்கும் அதிகமான ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும், பின்பு 15 ஆயிரம் சில்லரை வர்த்தக நிறுவனங்களும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications