Home
News

காது கேளாதவர்களுக்கு சத்தத்தை உணர்த்தும் புதிய கண்ணாடி

By Karthikeyan
காது கேளாதவர்களுக்கு சத்தத்தை உணர்த்தும் புதிய கண்ணாடி

காது கேளாத மனிதர்கள் பார்ப்பதற்கு ஜம்மென்று இருப்பார்கள். அவர்களிடம் அந்த குறைபாடு இருப்பது போல் தெரியாது. ஆனால் அவர்களால் இந்த உலகத்தின் இனிமையான சத்தத்தை மற்றும் இசையைக் கேட்ட முடியாது.

ஆனால் தொழில் நுட்பத்தின் மூலம் இனி் அவர்களால் சத்தத்தை உணர முடியும். அதற்காக ஒரு கண்ணாடி வந்திருக்கிறது. அதாவது கொரியாவில் இருக்கும் கொரியா அட்வான்ஸ்டு இன்ஸ்டிடியூட் ஆப் சைன்ஸ் அன்ட் டெக்னாலஜியைச் சேர்ந்த அறிஞர்கள் ஒரு புதிய மூக்குக் கண்ணாடியைக் கண்டுபிடித்திருக்கின்றனர்.

காது கேளாதவர்கள் இந்த கண்ணாடியை அணிந்து கொண்டால், அவர்கள் சத்தத்தை பார்க்க முடியும். அதாவது அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்று இந்த கண்ணாடி அவர்களுக்கு உணர்த்தும் என்று இந்த அறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்த கண்ணாடியின் பிரேமில் 7 மைக்ரோபோன்கள் உள்ளதால் அவை சத்தம் எங்கிருந்து வருகின்றது என்பதை காது கேளாதவர்களுக்கு மிக எளிதில் உணர்த்திவிடும்.

காது கேளாதவர்களுக்கு இந்த புதிய கண்ணாடி ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று நம்பலாம். மேலும் இந்த கண்ணாடி மிக விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X