விரைவில் இந்த அறிக்கை தமிழ்நாட்டிலும் பிறப்பிக்கப்படலாம்: பழனிச்சாமி கைகளில் தான் உள்ளது.!
பீகார் அரசாங்கம் ஒன்றிய அமைச்சரவையின் கூட்டம், கர்நாடக அரசாங்கத்தின் கலந்தாய்வு நடவடிக்கை கூட்டம் மற்றும் அனைத்து உயர் மட்ட கூட்டங்களில், மொபைல் போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பீகார் அரசாங்கம் ஒன்றிய அமைச்சரவையின் கூட்டம், கர்நாடக அரசாங்கத்தின் கலந்தாய்வு நடவடிக்கை கூட்டம் மற்றும் அனைத்து உயர் மட்ட கூட்டங்களில், மொபைல் போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாகத் துறை, முதன்மைச் செயலர் ஆமிர் சுபானி இந்த உத்தரவைப் நேற்று பிறப்பித்துள்ளார்.

செயலர்கள் & காவல்துறை அதிகாரிகள்
இதன்படி அனைத்துச் செயலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என உயர் மட்ட கூட்டங்களில் பங்குபெறும் அனைவரும் இனிமேல் கலந்தாய்வு நேரங்களில் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரகசிய தகவல் "டிவீட்-டிவீட்"
முக்கியமான கலந்தாய்வு கூட்டங்களில் அதிகாரிகள் மொபைல் போன்களில் மட்டுமே கவனமாக இருப்பதாகவும், அதைவிடக் கொடுமை என்னவென்றால் ரகசிய தகவல்களை உடனுக்குடன் வாட்ஸ் ஆப் அல்லது டிவிட்டர் இல் டிவீட் மற்றும் ஸ்டேட்டஸ் இல் பதிவு செய்து விடுவதாலும் , இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில துறையின் முதல்வர்க்கும் தடை.!
மாநில துறையின் முதல்வர், மாநில துறை அமைச்சர்கள், தலைமை செயலாளர், மாநிலத்தின் வளர்ச்சி ஆணையர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என அனைவருக்கும் உயர்மட்ட கூட்டத்தினுள் மொபைல் போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் விதித்த தடை.!
இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் அமைச்சரவை கூட்டங்களின் ரகசிய தகவல்கள் வெளியே கசியாமல் பாதுகாப்பதற்காக 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மொபைல் போன் பயன்படுத்தப் பிரதமர் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஜூலை, 2018 இல் கர்நாடகா முதலமைச்சர் எச்.டி. குமார்சாமி, அமைச்சரவை கூட்டத்தில் மொபைல் போன் பயன்படுத்தத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

செய்வீர்களா...?
இதே அறிக்கை மட்டும் உத்தரவு விரைவில் தமிழ்நாட்டிலும் பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செய்வாரா பழனிச்சாமி?


Click it and Unblock the Notifications