போச்சு.. 5-10% இல்ல.. 2026 இல் 30% விலை உயரப்போகும் ஸ்மார்ட்போன்கள்.. ஏன்?
மார்க்கெட்டில் உள்ள பெரும்பாலான தொழில்நுட்ப பிராண்டுகள் ஆனது மெமரி விலை நிர்ணயத்தில் (Memory Pricing) ஏற்பட்டு உள்ள உயர்வு காரணமாக தங்களுடைய தயாரிப்புகளின் "விலைகளை உயர்த்துவதில்" (Price Hike) கவனம் செலுத்தி வருகின்றன; 2026 க்கான விலை உயர்வை பரிசீலித்து வருகின்றன.
இந்த போக்கில் கார்ல் பெய் தலைமையிலான நத்திங் (Nothing) நிறுவனமும் இணைகிறது. அதாவது 2026 ஆம் ஆண்டு வெளியாகும் நத்திங் ஸ்மார்ட்போன்களின் விலை அதிகமாக இருக்கும் என்று நத்திங் நிறுவனம் கூறியுள்ளது. இதோடு நத்திங்கின் தலைமை நிர்வாக அதிகாரி - எங்களுடைய போட்டியாளர்களும் கூட இதையே தான் செய்வார்கள் அல்லது அதிகரித்த செலவுகளை சமாளிக்க அம்சங்களை குறைப்பார்கள் என்று கூறியுள்ளார்.

நத்திங்கின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன கார்ல் பெய், 2026 ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன் நிலப்பரப்பை எவ்வாறு பார்க்கிறார் என்பதை விரிவாக கூற லிங்க்ட்இனில் ஒரு பதிவை எழுதினார். தொழில்துறை முழுவதும் கூர்மையான விலை உயர்வை எதிர்பார்க்கலாம் அல்லது உற்பத்தியில் வேறு இடங்களில் பணத்தை மிச்சப்படுத்த சில பிராண்டுகள் ஸ்பெக் மேம்படுத்தல்களை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்று அவர் கூறுகிறார்.
"உங்கள் அடுத்த ஸ்மார்ட்போன் ஏன் அதிக விலைக்கு விற்கப்படும்" என்ற தலைப்பில், தொழில்நுட்ப பிராண்டுகளுக்கு நத்திங் எவ்வாறு ஒரு குறுக்கு வழியை காண்கிறது என்பதை பெய் கோடிட்டு காட்டினார். சில சந்தர்ப்பங்களில், மெமரி செலவுகள் ஏற்கனவே 3 மடங்கு அதிகரித்துள்ளன, முன்னெப்போதும் இல்லாத தேவை தொடர்ந்து கிடைக்கக்கூடிய விநியோகத்தை விழுங்குவதால் மேலும் உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறுகிறார்.
மெமரி மிக விலையுயர்ந்த ஸ்மார்ட்போன் கூறுகளில் ஒன்றாக வேகமாக மாறி வருகிறது, மேலும் ஆண்டு இறுதிக்குள் பொருட்களின் விலையில் மிகப்பெரிய ஒற்றை செலவு இயக்கியாகவும் மாறி வருகிறது, ஒரு வருடத்திற்கு முன்பு $20 க்கும் குறைவான விலையில் இருந்த மெமரி தொகுதிகள் ஆண்டு இறுதிக்குள் $100 ஐ தாண்டும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தொழில்துறைக்கான "கட்டமைப்பு மாற்றம்" என்று அவர் குறிப்பிடும் வகையில், மற்ற பிராண்டுகள் 30% வரை விலை உயர்வை அறிவிக்கலாம் என்றும் குறிப்பிடுகிறார். புதிய நத்திங் போன்கள் முந்தைய தலைமுறைகளை விட "தவிர்க்க முடியாமல்" அதிகமாக செலவாகும், ஆனால் சரியான தொகையை பகிர்ந்து கொள்ள முடியாது என்றும் பெய் கூறுகிறார்.
வரவிருக்கும் போநத்திங் ன் 4ஏ ஸ்மார்ட்போன் ஆனது அதன் மலிவு விலை சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் முதல் முறையாக UFS 3.1 தொழில்நுட்பத்தை கொண்டிருக்க உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது, இது நத்திங்கின் உற்பத்தி செலவுகளை இன்னும் அதிகரிக்கும் என்பதிலும், அதன் விளைவான நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போனின் விலை பட்ஜெட்டை மீறும் என்பதிலும் சந்தேகமே வேண்டாம்.
உயர்நிலை அம்சங்களைகளை துரத்துவதை விட பயனர் அனுபவத்தில் கவனம் செலுத்துவதால், ஸ்மார்ட்போன் சந்தையில் நத்திங் "ஒரே உண்மையான வேறுபாட்டாளராக" இருக்கும் என்று அவர் நம்புவதாகவும் கார்ல் பெய் கூறுகிறார். இருப்பினும், ஆப்பிள், கூகுள் மற்றும் சாம்சங் உள்ளிட்ட நத்திங்கின் போட்டியாளர்கள், பரந்த பார்வையாளர்களுக்கான ஸ்மார்ட்போன் உற்பத்தி மூலம் அளவிலான பொருளாதாரங்களிலிருந்து பயனடைகிறார்கள்.
ரேம் பற்றாக்குறை காரணமாக ஸ்மார்ட்போன் விலை உயர்வு குறித்து ஒரு பெரிய உற்பத்தியாளரிடமிருந்து இதுவரை வந்த தெளிவான அறிக்கை இதுவாகும். வேறு எந்த நிறுவனமும் இதுபோன்ற ஒரு அறிக்கையை அல்லது விளக்கத்தை கொடுக்கவில்லை. சத்தம் இல்லாமல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மற்ற டிவைஸ்களின் விலைகளை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. மெமரி விலை உயர்வு ஆனது "உலகறிந்த தகவல் என்பதால் விளக்கம் எதற்கு என்று நினைத்து இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








