ஆதாா் அட்டை: 50 கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட வாய்ப்பு.!
எனவே நீதிமன்றத்தின் உத்தரவால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆதார் தவிர்த்து பிற அடையாள அட்டையை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
பல்வேறு மக்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி பெறப்பட்ட சுமார் 50கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்படும் அபாயம் தற்சமயம் ஏற்பட்டுள்ளது, அதன்படி கே வ்யை சி (KYC - Know Your Customer) எனப்படும் தனிநபர் அடையாள
அட்டையை பெற்றுக் கொண்டுதான் செல்போன் நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குகிறது.

அதன்படி கடந்த 2016-ஆம் ஆண்டு ரிலையன்ஸ் குழுமத்தில் துவங்கப்பட்ட ஜியோ நிறுவனம் ஆதார் எண்களை மட்டும் பெற்றுக்கொண்டு தங்கள் சேவையை இதுவரை வழங்கி வருகிறது.

ஏர்டெல், பிஎஸ்என்எல்
குறிப்பாக ஏர்டெல், பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்களுகம் ஆதார் எண்ணைப் பெற்றுக்கொண்டு தான் தங்கள் சேவையை
வழங்கி வருகிறது. பின்பு ஜியோ நிறுவனம் தற்சமயம் 25 வாடிக்கையாளர்களுக்கு ஆதார் எண் அடிப்படையில் சேவையை
வழங்கி வருகிறது.

தனியார் நிறுவனங்கள்
மேலும் சமீபத்தில் வெளிவந்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி எந்தவொரு சூழுலிலும் தனியார் நிறுவனங்கள் ஆதார் எண்ணை பெற்றுக் கொண்டு பயனாளர்களுக்கு சேவையை வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டது.

சுமார் 50 கோடி பேர்
எனவே நீதிமன்றத்தின் உத்தரவால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆதார் தவிர்த்து பிற அடையாள அட்டையை பெறும்
நிலை ஏற்பட்டுள்ளது, குறிப்பாக சுமார் 50 கோடி பேர் ஆதார் எண் மூலம் செல்போன் எண்களை பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.

50 விழுக்காடு மக்கள்
இந்திய அளவில் 50 விழுக்காடு மக்கள் இதன் மூலம் பாதுப்புக்குள்ளாகி உள்ளனர். இதற்கான உத்தரவை தொலைத்தொடர்புத்துறை விரைவில் பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications