Home
News

ரூம் போட்டு யோசிப்பாங்களோ? ரயலில் இருந்து ஏவுகணை சோதனை செய்த வடகொரியா?

வடகொரியா உலக அமைப்புகளின் தடைகளை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அதன்படி கடந்த புதன்கிழமை அன்று திட்டமிட்ட இலக்கை மிகவும் துல்லியமாக தாக்கும் ஒரு ஏவுகணையை சோதனை செய்துள்ளது. மேலும் இது சார்ந்த தகவலை
சற்று விரிவாகப் பார்ப்போம்.

 கடந்த புதன்கிழமை (15-09-2021) அன்று

அதாவது கடந்த புதன்கிழமை (15-09-2021) அன்று திட்டமிட்ட இலக்கை மிகவும் துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையிலான க்ரூஸ் ஏவுகணையை சோதனை செய்து வெற்றி கண்டுள்ளது வடகொரியா. மேலும் இந்த ஏவுகணை சோதனை கொரிய தீபகற்ப நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ர்வதேச அமைப்புகளின்

அதேபோல் சர்வதேச அமைப்புகளின் எச்சரிக்கைகளையும் மீறி வடகொரியா மேற்கொண்டு வரும் இந்த ஏவுகணை சோதனையால் உலக அரசியல் பரபரப்பு நீடித்து வருகிறது. அதுவும் தற்போது பரிசோதனை செய்த இந்த ஏவுகணை ஆனது ரயலிலிருந்து புறப்பட்டு திட்டமிட்ட இலக்கை தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணை என வடகொரிய தெரிவித்துள்ளது.

, இந்த ஏவுகணை சுமார்

வெளிவந்த தகவலின்படி, இந்த ஏவுகணை சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாயந்து வடகொரியாவின் கிழக்கு கடற் பகுதியில் இருந்த இலக்கை தாக்கியதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த தொலைவை ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை ஆனது சில நிமிடங்களில் கடந்து விடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாங்டோக்கின் மத்திய பகுதியில் இருந்

மேலும் வடகொரிய யாங்டோக்கின் மத்திய பகுதியில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டிருப்பதாக தென் கொரியா தகவல் தெரிவித்துள்ளது. இப்போது ஏவுகணை தீப்பிழம்புகளை வெளிவிட்டவாறு செல்லும் புகைபப்படம் இணையதளததில் அதிக வைரலாகியுள்ளது. அதேபோல்

க்ரூஸ் ரக ஏவுகணைகள்

கடந்த ஜனவரி மாதம் க்ரூஸ் ரக ஏவுகணைகள் உருவாக்கப்பட்டு வருவதாக அதிபர் கிம் ஜோங் உன் அறிவித்திருந்தார். வருங்காலத்தில்அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் பணியை இவை செய்யும் என்றும் அவர் கூறியிருந்தார்.

வடகொரியா எதிர்கொண்டு வரும்

ஆனாலும் வடகொரியா எதிர்கொண்டு வரும் பொருளாதர, உணவுச் சாவல்களை எதிர்த்து போராடுவது கிம் ஜாங் உன் வெளிப்படையாக கூறி வந்தாலும், அணு ஆயுதத் திறன்களை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு அப்போது இருந்த

குறிப்பாக கடந்த 2019-ம் ஆண்டு அப்போது இருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் வியட்நாமின் ஹனோய் நகரில்
நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த பிறகு, வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தொடர்ச்சியாக அணு சக்தி திட்டங்களில் தீவிரமாக முதலீடு செய்து பாதுகாப்பு உத்திகளில் தன்னிறைவு பெறுவதில் உறுதியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுதத் திறன்களை தரம்

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் வடகொரியா அதன் அணு ஆயுதத் திறன்களை தரம் மிக்கதாகவும் அதே சமயம் எண்ணிக்கையில் அதிகரிக்கும் வகையிலான ஒரு பாதையில் பயணித்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
North Korea tests new missile launcher from train: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X