Home
News

வட கொரியா மீண்டும் அதிரடி: இந்த முறை நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவுகணை சோதனை.!

வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்துவதற்கு ஐ.நா தடை விதித்துள்ளது. இருந்தபோதிலும் அந்த தடையையும் மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. அண்மையில் வெளிவந்த தகவலின்படி, நீர்மூழ்கி கப்பலில் இருந்து எதிரிகளை தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது.

 இந்த திடீர் சோதனை கிழக்காசிய பிராந்தியத்தில்

வடகொரியாவின் இந்த திடீர் சோதனை கிழக்காசிய பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த மாதம் கண்டம்
விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை உட்பட பல ஏவுகணை சோதனைகளை நடத்தியது வட கொரியா. எனவே இதன்வாயிலாக அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தி அதன் நட்பு நாடான அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளைநீக்க வட கொரிய முயற்சி செய்து வருவதாக தெரிகிறது.

போல் அணு ஆயுத தாயரிப்பை முழுமையாக

அதேபோல் அணு ஆயுத தாயரிப்பை முழுமையாக கைவிட்டால் வட கொரியா உடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக
உள்ளதாக சமீபத்தில் அமெரிக்கா சார்பில் கூறப்பட்டது. ஆனாலும் அமெரிக்காவின் அழைப்பை நிராகரிக்கும் வகையில் நேற்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளது வடகொரியா.

2016ஆம் ஆண்டு பாலிஸ்டிக் ஏவுகணை

குறிப்பாக 2016ஆம் ஆண்டு பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப் பயன்படுத்தப்பட்ட அதே நீர்மூழ்கி கப்பலைதான் இப்போதும்பயன்படுத்தியதாக தெரிகிறது. மேலும் இது தொடர்பாக தென் கொரிய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், நீர்மூழ்கி கப்பலில் பயன்படுத்தப்படும் குறுகிய தூரம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தி உள்ளது.

துறைமுகம் அருகே இருக்கும்

அதுவும் சின்போ துறைமுகம் அருகே இருக்கும் கடற்பகுதியில் இந்த சோதனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பின்பு இந்த சோதனை தொடர்பான விவரங்கள் குறித்து தென்கொரியா மற்றும் அமெரிக்கா ராணுவனத்தினர் ஆராய்ந்து வருகின்றனர்.

2019-ம் ஆண்டு நீர்முழ்கி கப்பல்

வடகொரிய கடந்த 2019-ம் ஆண்டு நீர்முழ்கி கப்பல் ஏவுகணை சோதனையை நடத்தியது. பின்பு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதேபோன்ற சோனையை நடத்தியிருப்பது கிழக்க ஆசிய பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

டகொரியா பல்வேறு முயற்சிகளை

குறிப்பாக வடகொரியா பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. அதுவும் வடகொரியா அதன் அணு ஆயுத ஏவுகணைசோதனையை இன்னும் நிறுத்தியதாக இல்லை. இது போன்ற ஏவுகணை சோதனையால் உலக நாடுகள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல முறை வடகொரியாவின் இந்த போக்கிற்குப் பல முறை கண்டனமும் பல எதிர்ப்புகளையும் உலக நாடுகள் தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

டகொரியா ரயலிலிருந்து புறப்பட்டு

கடந்த மாதம் வடகொரியா ரயலிலிருந்து புறப்பட்டு திட்டமிட்ட இலக்கை தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணை சோதனை
செய்ததாக தகவல் வெளிவந்தது.இந்த ஏவுகணை சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாயந்து வடகொரியாவின் கிழக்கு கடற் பகுதியில் இருந்த இலக்கை தாக்கியதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த தொலைவை ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை ஆனது சில நிமிடங்களில் கடந்து விடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
North Korea tests missile from submarine: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X