அமெரிக்காவை அசால்ட்டா நடுங்க வைத்த வடகொரியா: கிம்மின் ராஜதந்திரம்.!
வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை நீக்குவது குறித்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் ஜிம்ஜோங் உடன் பேச்சு வார்த்தை நடந்தது. இது தோல்வியில் முடிந்ததால், நிறுத்தி வைத்த
வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை நீக்குவது குறித்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் ஜிம்ஜோங் உடன் பேச்சு வார்த்தை நடந்தது.
இது தோல்வியில் முடிந்ததால், நிறுத்தி வைத்திருந்த அணு ஆயுத சோதனையை வடகொரியா மீண்டும் தொடர்ந்தது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பின் 2வதுமுறையாக வடகொரியா அணு ஆயுத சோதனை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
தற்போது நடந்த சோதனை அமெரிக்காவையும் நடுக்க வைக்கும் அளவுக்கு இருந்துள்ளது.

2ம் கட்ட பேச்சு வார்த்தை தோல்வி:
ஏவுகணை சோதனை நடத்தி வரும் வடகொரியா மீது முன்பு பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா. மேலும், இதனிடையே நல்லறவு ஏற்பட, வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தியது.
அமெரிக்கா கூறிய படி தடைகளை விலக்கவில்லை. இதனால் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு திரும்பியது வடகொரியா.

ஏவுகணை சோதனை:
தலைநகர் பியோங்யாங்கின் வடக்கில் சினோரி என்ற இடத்தில் அணு ஆயத ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளது. இதனால் தென்கொரியா பதற்றம் அடைந்தது.
இதுகுறித்து தென்கொரியா கூட்டு படைகளின் வடகொரியா சோதனை குறித்து தலைவர்கள் உறுதிப்படுத்தினர்.

சனிக்கிழமை ஏவியது:
வடகொரியாவின் கிழக்கு கடற்கரையில் இருந்து பல ஏவுகணைகளை கடந்த சனிக்கிழமை வடகொரியா ஏவியது.
அணு ஆயுதப் பேச்சுவார்த்தையில் தமக்கு சாதகமான சலுகைளை வழங்க அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கவே வடகொரியா இந்த ஆயுத சோதனையை மேற்கொண்டுள்ளது என கூறப்படுகின்றது.

ஓரே வாரத்தில் 2 முறை சோதனை:
ஓரே வாரத்தில் 2 முறை ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை, குறைந்த அளவுள்ள ஏவுகணை என்று பல்வேறு தொழில்நுட்பத்தில் சோதனைகளை நடத்தி அமெரிக்காவை வியக்க நடுக்க வைத்துள்ளது.

பேச்சு வார்த்தைக்கு பயணம்:
முடங்கியுள்ள அணு ஆயுதப் பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்குவது பற்றி பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தூதர் தென்கொரிய தலைநகர் சோலுக்கு பயணம் மேற்கொண்டார்.
கடந்த பிப்ரவரி வியட்நாமின் தலைநகர் ஹனோயில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் ஜிம் ஜோங் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

உள்ளூர் நேரப்படி ஏவுகணை:
2ம் முறை சோதனை உள்ளூர் நேரப்படி கடந்த வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக தென்கொரிய ராணுவம் தகவல்களை வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications