Home
News

டிரம்ப் உடன் சத்திப்புக்கு ஏற்பாடு செய்த அதிகாரிக்கு மரண தண்டனை: ஹிட்லரை மிஞ்சும் கிம்.!

குறிப்பாக கடந்த மார்ச் மாதமே மிரிம் விமான நிலையத்தில், மேலும் நான்னு மூத்த வெளிநாட்டு அதிகாரிகள் தூக்கிலிடப்பட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் இடையேயான 2-வது சந்திப்பு கடந்த பிப்ரவரி மாதம் வியட்நாமில் ஹனோய் நகரில் நடைபெற்றது என அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த சந்திப்பில்
சமூக உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்தை தோல்வியில் முடிந்தது.

 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை

இந்நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியால் அதிருப்தி அடைந்த வடகொரியா மீண்டும் அடவாடி நடவடிக்கைகளில் ஈடுபட துவங்கியது. அன்மையில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தியது.
குறிப்பாக குறிகிய அளவிலான தூரம் செல்லும் ஏவுகணை சோதனை என படிப்படியாக மீண்டும்
அடவாடியில் ஈடுபட்டு வருகிறது எனபது குறிப்பிடத்தக்கது.

கிம் ஹயோக் சோல்

கிம் ஹயோக் சோல்

இப்போது வந்த தகவல் என்னவென்றால் டொனால்டு டிரம்ப் உடனான சந்திப்பிக்கு ஏற்பாடு செய்த, அமெரிக்காவுக்கான வடகொரியாவின் சிறப்பு தூதரான கிம் ஹயோக் சோல் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு விட்டதாக தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செய்தியில் கூறப்பட்டுள்ளது

செய்தியில் கூறப்பட்டுள்ளது

மேலும் வடகொரியாவின் துப்பாக்கிச்சுடுதல் குழுவினரால், உச்ச தலைவருக்கு துரோகம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் கிழ், கிம் ஹயோக் சோலுக்கு மரண தண்டனை நிறைவேற்ப்பட்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மிரிம் விமான நிலையத்தில்

மிரிம் விமான நிலையத்தில்

குறிப்பாக கடந்த மார்ச் மாதமே மிரிம் விமான நிலையத்தில், மேலும் நான்கு மூத்த வெளிநாட்டு அதிகாரிகள் தூக்கிலிடப்பட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்,வேறு எந்த அதிகாரிகளின் பெயரும் வெளியிடப்படவில்லை.

இவ்விவகாரம் பற்றி கருத்து கூற மறுத்துவிட்டது

இவ்விவகாரம் பற்றி கருத்து கூற மறுத்துவிட்டது

பின்பு வடகொரியா விவகாரங்களை கையாளும், தென்கொரியா ஒருங்கிணைப்பு அமைச்சகம், இவ்விவகாரம் பற்றி கருத்து கூற மறுத்துவிட்டது. மேலும் உச்சி மாநாட்டின் போது தவறு செய்ததற்காக கிம் ஜாங் அன்னின் மொழிப்பெயர்ப்பாளர் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெனிகொரிய செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரு நிலையான ஆட்சிக்கு சொந்தமான நாடல்ல எ

ரு நிலையான ஆட்சிக்கு சொந்தமான நாடல்ல எ

வடகொரியா - ஒரு நிலையான ஆட்சிக்கு சொந்தமான நாடல்ல என்பதை அந்நாட்டு அதிபரான கிம் ஜொங் உன் முகத்தை பார்த்தாலே புரியும். சர்வாதிகாரம் மிக்க வடகொரியாவை அழிக்கும் நோக்கத்திலேயே - சமீபத்தில் மட்டுமின்றி - பல வருடங்களாக அதன் மீது
பல்வேறு வகையான சர்வதேச தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

"ஹிட்லர்" ஆட்சி

அந்த தடைகளின் வழியாக வடகொரிய குடிமக்களுக்கு இடையே கிளர்ச்சி ஏற்படவேண்டும் அல்லது வடகொரியாவின் "ஹிட்லர்" ஆட்சி முற்றிலுமாக சரிவை காண வேண்டும் என்பது தான் அதன் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கான பிராதன பின்னணியாகும்.

ஒருபொழுதும் தத்தளித்தில்லை

ஒருபொழுதும் தத்தளித்தில்லை

அவ்வப்போது உலக நாடுகளை மிரட்டும் அளவிலான அணுவாயுத சோதனைகளை நிகழ்த்தி, எப்போதும் தான் உயிர்த்திருப்பதை
நிரூபித்துக்கொண்டே இருக்கும் வடகொரியாவின் ஆட்சியானது, ஒரு நிலைப்பாடு இல்லாமல் மிதந்து கொண்டிருந்தாலும் கூட ஒருபொழுதும் தத்தளித்தில்லை, மூழ்கியதுமில்லை என்பதே உண்மையான கருத்து.

Best Mobiles in India

English summary
NKorea-executed-officials-after-failed-Trump-summit : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X