டிரம்பாவது அமெரிக்காவாவது எச்.ராஜா பாணியில் வடகொரிய அணுஆயுத சோதனை.!
பாஜவை சேர்ந்த எச்.ராஜா கோர்ட் குறித்து அவதூறாக பேசியிருந்தார். இந்த காட்சிகள் அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரல் ஆனது. அமெரிக்காவின் கூற்றை ஏற்று நிறுத்தி அணு ஆயுத சோதனைகளை வடகொரியா நிறுத்தி வைத்த
பாஜவை சேர்ந்த எச்.ராஜா கோர்ட் குறித்து அவதூறாக பேசியிருந்தார். இந்த காட்சிகள் அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரல் ஆனது.
அமெரிக்காவின் கூற்றை ஏற்று நிறுத்திய அணு ஆயுத சோதனைகளை வடகொரியா நிறுத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், எச்.ராஜாவின் பாணியை போல, டிரம்ப்பாவது, அமெரிக்காவாவது என்று அதிபர் கிம் ஜோன் உன் அணு ஆயுத சோதனையை துவங்கியுளார்.

வடகொரியா:
எந்த நாட்டிற்கும் அடிபணியாமல் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வந்தது வடகொரியா. மேலும் அருகே இருக்கும் தென்கொரியாவும்-ஜப்பானும் கிடுகிடுக்கும் அளவுக்கு ஏவுகணை சோதனையை செய்தது வடகொரியா. இதையடுத்து அமெரிக்கா வரை சென்று தாக்கும் அளவுக்கு ஏவுணையை சோதனையை நடத்தியது வடகொரியா.

பொருளாதார தடை:
இதையடுத்து உலக நாடுகள் பலவும் வடகொரிய ஏவுகணை சோதனையால் கிடுகிடுத்து போயியுள்ளது. இதையடுத்து, அமெரிக்கா பொருளாதார தடையை தென்கொரியா மீது விதித்தது. மேலும், மீண்டும் ஏவுகணை சோதனை செய்வதாக அறிவித்த நிலையில் தென்கொரிய-வடகொரிய அதிபர்கள் சந்திக் கொண்டனர். பிறகு இருநாடுகளுக்கும் இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டது.

டிரம்ப் உடன் கிம் ஜோங் உன்:
வடகொரிய அதிபர் ஜிம் ஜோங் உடன் அமெரிக்கா அதிபர் டிரம்பை கடந்த ஆண்டு ஜூன் மாதம் சந்தித்து பேசிய பிறகு, இந்த சூழல் மாறியது. வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி, அமைதிக்கு திரும்பியதை சர்வதேச நாடுகள் வரவேற்றன.

2ம் சதிப்பு தோல்வி:
டிரம்ப்-ஜிம் ஜோங் உடனான சந்திப்பின் போது, தங்கள் நாட்டு விதிக்கப்பட்ட தடைகள் நீக்கமாறு கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் இந்த கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றகவில்லை. இதையடுத்து, பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் மீண்டும் வடகொரியா அணு ஆயுத சோதனைக்கு சென்று விடுமோ என்ற சூழ்நிலை ஏற்பட்டது. இதன் பிறகு, இருநாட்டு தலைவர்களும் பரஸ்பரம் செய்து 3வது உச்சி நாட்டு சம்மதம் தெரிவித்தனர்.

அணு ஆயுத சோதனைகள் நிறுத்தின:
இந்த நாள் வரை அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி வைத்திருந்தது. மேலும், ஆனால், அமெரிக்காக கூறிய படி நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை விலக்கவில்லை.

முதல் முறையாக சந்திப்பு:
வரலாற்றில் முக்கிய நிகழ்வாக ரஷ்ய அதிபரும் வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன்னும் சந்தித்துக் கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வரும் 24ம் தேதி ரஷ்ய அதிபர் புதின் தங்கள் நாட்டிற்கு வருவதாக வடகொரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், அன்று புதின்- கிம் ஜோங் உன் சந்திப்பு நிகழும் என்று சொல்லப்படுகின்றது. மேலும் பல்வேறு முக்கிய முடிவுகளையும் இருவரும் எடுப்பதாக கூறப்படுகின்றது.

டிரம்ப்பாவது, அமெரிக்காவாவது:
இதுதொடர்பாக கேசிஎன்ஏ எனப்படும் கொரிய அரசு செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தியில், இதனை பற்றி தெளிவான தகவல்கள் சொல்லப்படவில்லை. ஆனால், இது சக்தி வாய்ந்த போர் ஆயுதத்தோடு பொருத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையை கிம் மேற்பார்வையிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்தியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications