சென்னையில் நோக்கியா உற்பத்தி குறைப்பு:வரி ஏய்ப்பு காரணமா?

|

முன்னனி மொபைல் நிறவனங்களில் ஒன்றான நோக்கியா சென்னையில் தனது மொபைல் உற்பத்தி தொழிற்சாலையின் ஒரு பிரிவை கொண்டுள்ளது. நோக்கியா நிறுவனம் தனது சென்னை தொழிற்சாலையின் உற்பத்தியை இப்பொழுது பாதியாக குறைத்துள்ளது.

நோக்கியா நிறுவனம் நிதி அமைச்சருகக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், தங்களுக்கு தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட எந்த ஒரு வரி சலுகையும் கிடைக்கவில்லை என்றும், சென்னையில் உள்ள தங்களது உற்பத்தி பிரிவை வியாட்னாமுக்கு மாற்ற போவதாகவும் தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள நோக்கியா மொபைல் உற்பத்தி பிரிவி்ல் இப்பொழுது வருடத்திற்க்கு 15 கோடி மொபைல் யுனிட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 2013-2014ஆம் ஆண்டிற்க்கான உற்பத்தி அளவு 8 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 2014-2015ஆம் ஆண்டிற்க்கான உற்பத்தி அளவு 4 கோடியாக குறைக்கப்படும் என தெரிகிறது.

Click Here For New Nokia Mobiles Gallery

சென்னையில் நோக்கியா உற்பத்தி குறைப்பு:வரி ஏய்ப்பு காரணமா?

Click Here For List of New Smartphones And Tablets Price & Specs

சென்னையில் உள்ள நோக்கியா மொபைல் உற்பத்தி பிரிவி்ல் கிட்டதிட்ட 9000 நபர்கள் வேலை செய்கின்றனர். நோக்கயா தனது உற்பத்தியை குறைத்ததால் 2000 எம்பிளாய்க்ளுக்கு வேலை போகும் அபாயம் உள்ளது. நோக்கியா நிறுவனம் சென்னை உற்பத்தி பிரிவில் 2082கோடியை முதலீடு செய்துள்ளது.

நோக்கியாவின் சென்னை பிரிவில் பேசிக் மாடல் மொபைல்கள் மற்றும் நோக்கியாவின் ஆஷா மாடல் மொபைல்கள் தான் அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆசியா மற்றும் ஆப்ரிக்கா போன்ற பல நாடுகளுக்கு இந்த மொபைல்கள் மார்கெட்டிங் செய்யப்படுகின்றன.

ஏற்கனவே வருமான வரி சோதனை நோக்கியாவின் சென்னை உற்பத்தி பிரிவில் நடந்துள்ளது. வரி ஏய்ப்பு செய்ததாக நோக்கியா நிறுவனத்திற்க்கு 13,000 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதன் காரணமாக தான் நோக்கியா தனது உற்பத்தியை குறைத்துள்ளது என சில ஊடகங்கள் சொல்கின்றன.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X