இந்தியாவில் நோக்கியாவின் ஸ்மார்ட் ஏசி அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!
நோக்கியா நிறுவனம் டிவி, லேப்டாப் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நோக்கியா, வீட்டு உபகரணங்கள் பிரிவில் நுழைவதைக் குறிக்கும் வண்ணம் பிளிப்கார்ட் தளம் 'மேட்-இன்-இந்தியா' நோக்கியா ஏர் கண்டிஷனர்களை அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பாக ரூ.30,999 என்கிற விலையில் இந்த நோக்கியா ஸ்மார்ட் ஏசிகள் விற்பனைக்கு வரும். மேலும் இந்த சாதனம் வரும் டிசம்பர் 29 2020 முதல் பிளிப்கார்ட் வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த புதிய நோக்கியா ஏர் கண்டிஷனர்களில் environment-friendly R-32 refrigerant,Intelligent motion sensors, Adjustable Inverter mode, wi-fi connected Smart climate control போன்ற அசத்தலான அம்சங்கள் உள்ளன. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

நோக்கியா நிறுவனம் அறிவித்த தகவலின்படி, இந்த ஏர் கண்டிஷனர்கள் குளிரூட்டலுக்கு அப்பாற்பட்ட அனுபவத்தைவழங்குகின்றன. பின்பு இந்த நோக்கியா ஏர் கண்டிஷனர் ஒரு மறைக்கப்பட்ட டிஸ்பிளேவுடன் வருகிறது, எனவே இந்த ஏசியை நீங்கள் ஆன் செய்ததும் அது காட்சிப்படும். பின்பு இது மிகவும் நிசப்தமான அனுபவத்தை வழங்கும் நோக்கத்தின் கீழ்
triple inverter technology, brushless DC motors மற்றும் ஒரு dual rotary compressor போன்றவற்றை ஆதரிக்கிறது.

நோக்கியா ஸ்மார்ட் ஏசி மாடல் anti-microbial ionizer வசதியுடன் 6 இன் 1 பில்டர்களின் உதவியுடன் self-cleaning technology என்கிற ஆதரவையும் கொண்டுள்ளது. பின்பு இந்த ஏசி அதன் 4-in-1 adjustable tonnageமூலம், சிறிய அறையை குளிர்விக்க குறைந்த அளவிலான சக்தியை பயன்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் ஏசி ஆனது ஸ்மார்ட்ஹோம் + ஆப் மூலம் கட்டுப்படுத்த முடியும். எனவே நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆன் மற்றும் ஆப் செய்ய முடியும். அதேபோல் வெப்பநிலையை கட்டுப்பத்த மோட்-களை மாற்றி இயக்கலாம்.

அதேபோல் மொபைல் மொபைல் ஆப் அணை பில்டர்களை சுத்தம் செய்யச் சொல்லியும், ஏசியில் உள்ள ஏதேனும் சிக்கல்கள் குறித்தும், பல வகையான வசதிகளை செட் செய்யவும் உங்களுக்கு smart reminders-களை அனுப்பும் என்பது குறிப்பிடத்தகக்து.


Click it and Unblock the Notifications