முன்னாள் காதலியின் ஆபாசப் படங்களை பகிர்ந்த காதலன் கைது.!
தனது முன்னாள் காதலியின் ஆபாசப் படங்களை பகிர்ந்து கொண்டதாகக் கூறி ஒருவரை கைது செய்ததை நொய்டா காவல்துறை, பதிவு செய்த சில நாட்களுக்கு பின்னர், இந்த வழக்கில் மேலும் நான்கு பேரின் பங்கை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

குறிப்பாக இந்த ஆபாச படங்களை பலருக்கும் பகிர்ந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், பல ஆபாச தளங்கள் மற்றும் பெண்ணின் தனிப்பட்ட புகைப்படங்களை அணுகுவதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காவல் துறையினர் குறைந்தது 500ஆபாச தள விற்பனையாளர்களின் சட்டவிரோத தரவுகளை அணுகி, அதை வைத்து குற்றம் சாட்டப்பட்டவர் வாட்ஸ்அப்பில் சுமார் நான்கு-ஐந்து நபர்களுடன் சட்டவிரோத உள்ளடக்கத்தை வைத்திருப்பதாக
விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதாவது கடந்த மே 3 ம் தேதி, ஒரு பெண் நொய்டாவில் உள்ள Phase 3 காவல் நிலையத்தை அணுகி, தன்னுடைய சில ஆபாசப் படங்கள்
சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக புகார் அளித்தார். ஐ.டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த பின்னர் போலீசார் விசாரணையைத்
தொடங்கினர்.

விசாரணை அதிகாரிகள் சாத்தியமான சந்தேக நபர்களைப் பற்றி பெண்களிடம் கேட்டனர் மற்றும் அவரது முன்னாள் காதலனைபற்றி அறிந்துகொண்டனர். அந்த முன்னாள் காதலன் தான் இந்த தேவையில்லாத வேலையை செய்வதாக தெரியவந்தது,எனவே அவர் மேற்கு வங்கத்தில் இருந்துள்ளார்,உடேன அவர் கைது செய்யப்பட்டார். இவருடன் சிலர் நபர்களும் கைது செய்யப்பட்டனர்என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்ட சட்டவிரோத தரவு வைத்திருந்த குற்றம் சாட்டப்பட்டவரின் மொபைல் போனை விசாரணை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் தான் இந்த தேவையில்லா செயல்களை செய்துள்ளார் என தெரியவந்து,அவரின் சமூக வலைதளங்கள் அனைத்து முடக்கப்பட்டன.

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் குற்றம் சாட்டப்பட்டவருடன் புகார்தாரரின் உறவு நான்கு-ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு முடிந்தது.
இருந்தபோதிலும், குற்றம் சாட்டப்பட்டவர் தனது ஆபாச படங்களை சமூக ஊடக தளங்களில் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications