தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் கிடையாது: டிவி மூலமாக கற்பிக்கப்படும்: செங்கோட்டையன்!
சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா. உலகின் 212 நாடுகளில் பரவித் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பிரதான ஒன்றாக ஊரடங்கு அமல் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பிரதான ஒன்றாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களுக்குள் நுழையும் வெளியேறவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

தற்சமயம் வெளிவந்த தகவலின் அடிப்படையில் தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது என்றும், டிவி மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தப்படாது என்றும் டிவி மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் ஒரு சேனல் என்றும் 5தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறியுள்ளார்.

முன்பு அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பை வரும் 13-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார்என தெரிவிக்கப்பட்டது, ஆனால் ஆன்லைன் வழி வகுப்புகளை பெறக்கூடிய வகையில் அனைத்து மாணவர்களிடம் ஸ்மார்ட்போன்இணையவசதி உள்ளிட்ட கட்டமைப்பு இருக்குமா, என்று கேள்வி எழுந்தது.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசியுள்ள அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாதுஎன்றும் டிவி மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

கொரோனாபரவாமல் தடுப்பதற்காக 4மாத காலமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்பட்டது மாணவர்களும் கல்வித்துறையும்தான். பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்றும் யாராலும் உறுதியாக கூறமுடியவில்லை. மேலும் உயர்நிலைக் கல்வித்துறையில்இறுதி தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று அறிவிக்க முடியவில்லை மிகவும் பாதிக்கப்பட்ட துறையாக கல்வித்துறை உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது, டிவி மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது டி.வி. மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications