இந்தியாவில் எந்த மொபைல் பேமண்ட் ஆப்பும் முற்றிலும் பாதுகாப்பானதாக இல்லை, ஏன்.?
மொபைல் பேமண்ட் சேவைகளில் பயனர் தரவு பாதுகாக்கும் மென்பொருள் நிலை பாதுகாப்பு மட்டுமே உள்ளது, வன்பொருள் அடிப்படையிலான குறியாக்கம் கிடையாது.
மொபைல் சிப்செட் உற்பத்தியாளர் ஆன க்வால்காம் இந்தியாவில் முற்றிலும் பாதுகாப்பான மொபைல் பேமண்ட் ஆப்ஸ்கள் கிடையாது. அதாவது இந்தியாவில் நுகர்வோர்கள் பயன்படுத்தும் பேமண்ட் ஆப்ஸ்கள் அனைத்தும் முழுமையான பாதுகாப்பு கொண்டவைகள் என்று கூறியுள்ளது.

அந்நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மை அதிகாரியான எஸ் சவுத்ரி, மூத்த இயக்குநர் "மொபைல் பேமண்ட் சேவைகளில் பயனர் தரவு பாதுகாக்கும் மென்பொருள் நிலை பாதுகாப்பு மட்டுமே உள்ளது, வன்பொருள் அடிப்படையிலான குறியாக்கம் கிடையாது. ஆக அது பயனர் உள்நுழைவு விவரங்கள் மற்றும் தரவு ஆகியவைகளை அணுக அனுமதிக்கக்கூடும்" என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் வங்கி அல்லது பணப்பை பயன்பாடுகள் மிகவும் வன்பொருள் பாதுகாப்பு கொண்டதாக இல்லை" என்றும் சவுத்ரி கூறியுள்ளார். "அவர்கள் (டேட்டா திருடுபவர்கள்) முற்றிலும் ஆண்ட்ராய்டு முறை கொண்டே ஒரு பயனரின் கடவுச்சொல்லை திருடுகிறாரகள் மறுபக்கம் ஒரு மொபைல் வங்கி பயன்பாட்டில் வன்பொருள் அடிப்படையிலான பாதுகாப்பு உள்ளதா அல்லது கிடையாதா என்றுகூட ஒரு பயனருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை" என்றும் சவுத்ரி கூறியுள்ளார்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

"போன்கள் மூலம் பேமண்ட் நிகழ்த்தும் டிஜிட்டல் பேமண்ட் கம்பெனிகள் தனது பயனர்களுக்கு பாதுகாக்கப்பான சூழ்நிலையை உருவாக்கித்தருமாறு க்வால்காம் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது" என்று க்வால்காம் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
அக்கவுண்ட்'ல இருந்து பணம் எடுக்க இந்த ஆப் போதும் பாஸ்..!
இண்டர்நெட், ஸ்மார்ட்போன் இன்றி பேடிம் அணுகல் : டோல்-ப்ரீ எண் அறிமுகம்..!


Click it and Unblock the Notifications