Home
News

மொபைல் டவர்கள் வெளிக்கிடும் கதிர்வீச்சு, நம்மை பாதிக்கிறதா .? மழுப்பும் அரசாங்கம்..?

By Muthuraj

கதிர்வீச்சு (radiation) என்பது இயற்பியலில் சக்தியுள்ள துகள்கள் அல்லது அலைகள் ஆனது ஒரு ஊடகத்தினூடாக அல்லது ஒரு வெளியினூடாக (through space or through a material medium) கடந்து செல்வதைக் குறிக்கும்.

அப்படியான, கதிர்வீச்சானது மனித உடல் நலத்திற்கு பாதகம் விளைவிக்கும் என்றும், முக்கியமாக மொபைல் டவர்களுக்கு அருகமையில் வாழும் மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது.

#1

#1

மொபைல் போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சானது, மனித உடல் நலத்திற்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த விதமான அறிவியல் விளக்கமும் இல்லை என்று மக்களவை கூறியுள்ளது.

#2

#2

உலகளவில், குறிப்பாக அமெரிக்க மற்றும் கொரியா ஆகிய நாடுகளில் எக்கச்சக்கமாக மொபைல் கோபுரங்கள் பயன்படுத்தப்படும் போதிலும் இந்தியாவில் மட்டுமே கதிர்வீச்சு பாதிப்புகள் என்ற விவாதம் எழுகிறது.

#3

#3

குறிப்பாக இந்த விவாதமானது இந்தியாவை-மையப்படுத்திய ஒன்றாகவே இருக்கிறது என்று தனது அதிருப்தி தெரிவித்துள்ளார் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.

#4

#4

மொபைல் கோபுரங்கள் மூலம் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கணிசமான அளவில் கூட ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை என்றும் அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

#5

#5

மேலும் "கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வரையிலாக மொபைல் டவர் ரேடியேஷன் சார்ந்த ஆய்வு நடத்திய உலக சுகாதார மையம் (WHO) கூட இதன் மூலம் எந்த விதமான மிரட்டலும் இல்லை என்று கூறியுள்ளதையும் அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் சுட்டிக்காட்டியுள்ளார்.

#6

#6

இந்தியாவில், மொபைல் கோபுரங்களில் இருந்து வரும் கதிர்வீச்சு தாக்கம் சார்ந்த அனுபவ அறிவியல் ஆராய்ச்சி நடத்தப்பட்டு இருக்கின்றனவா என்று கேள்வியும் மக்களவையில் எழுப்பபட்டுள்ளது.

#7

#7

குறிப்பாக, பறவைகள் மொபைல் கோபுரங்களை விட்டு விலகியே பறப்பதற்கும், மொபைல் டவர்களில் அமராமல் இருப்பதற்கும் என்ன காரணம் என்ற கேள்வி எழுப்பட்ட்டது.

#8

#8

அலகாபாத் உயர் நீதிமன்றம் மூலம் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு நடத்திய அறிவியல் ஆய்வில் இருந்து மொபைல் கோபுரங்கள் மனித சுகாதாரத்திற்கு எந்தவிதமான பாதகமான தாக்கமும் ஏற்படுத்தவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது என்று அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.

#9

#9

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 24,000 மொபைல் கோபுரங்கள் நிறுவப்பட்டு இணைப்பு வசதிகளின் திறன் அதிக அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. விரைவில், மேலும் 20,000 கோபுரங்கள் அமைக்கப் பட இருக்கிறது என்றும் அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் முன்பு அறிவித்திருந்தார்.

#10

#10

மனித அறிவியலை 'துச்சமாக' கருதும் 11 மிரட்டல் மனிதர்கள்..!


2 மணி நேரம் பூமியின் காந்தப்புலம் 'செயலிழந்தது' உண்மையா..?!


'எஃப்' மாற்றம் 'ஜே' கீகளில் இருக்கும் சிறு கோடு, காரணம் தெரியுமா..?!

#11

#11

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
No Health Hazards Due to Radiation From Mobile Towers. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X