ஜூன் 30: அனைத்து ஏடிஎம்களிலும் எத்தனைமுறை வேண்டுமானாலும் பணம் எடுங்கள்.!
இந்த கொரோனா வைரஸை மக்கள் துரத்துவதற்காக அவர்களுக்கு உதவும் பொருட்டு மத்திய நிதி அமைச்சம் புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. இதன் காரணமாக வங்கி வாடிக்கையாளர்கள் அவர்கள் வீடுகளில் நிம்மதியாக இருக்க முடியும்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
அதாவது சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், வேறு எந்த வங்கி ஏடிஎம்மிலிருந்தும் ஒரு வங்கியின் வாடிக்கையாளர் மூன்றுமாதங்களுக்கு அதாவது ஜூன் 30 வரை, பணம் எடுத்துக் கொள்ளலாம் எனறும் அதற்கு எந்தவித அபராத கட்டணமும்வசூலிக்கப்படாது எனவும் கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா
சீதாராமன் தெரிவித்தார்.

அபராத கட்டணம்
எனவே டெபிட் அட்டைதாரர்கள் வேறு எந்த வங்கி ஏடிஎம்மிலிருந்தும் இலவசமாக மூன்று மாதங்களுக்கு பணம் எடுத்துக்கொள்ளலாம். பின்பு வேறு ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது அதிகபட்ச பரிவர்த்தனை வரம்பை கடந்து விட்டால் வங்கி அதற்காக அபராத கட்டணம் வசூலிக்கும் என்றும் கவலைப்படாமல் ஜீன் 30 வரை நீங்கள் எந்த வங்கி ஏடிஎம்மிலிருந்தும் எத்தனை தடவை வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்பதே இதற்கான அர்த்தம்.

அதன்படி ஒரு உதரணம் கூறவேண்டும் என்றால், ஒரு எஸ்பிஐ வாடிக்கையாளர் ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா அல்லது வேறு எதாவது வங்கி ஏடிஎம்மிலிருந்து ஜூன் 30 வரை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம், இதறகு எந்தவித அபராத கட்டணமும் வசூலிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்தபட்ச இருப்பு
மேலும் நிதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு என்னவென்றால், சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு (minimum balance) பராமரிப்பது தொடர்பாக, ஜூன் 30 வரை, குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காவிட்டால் விதிக்கப்படும் அபராத கட்டணமும் தள்ளுபடி செய்யப்படுகிறது என நிதி அமைச்சர் தெரிவித்தார். குறிப்பாக எஸ்பிஐ வங்கியை தவிர இதரவங்கிகளிளும சேமிப்பு கணக்கில் சராசரி மாத இருப்பை பராமரிக்க வேண்டும்.

சராசரி மாத இருப்பை பராமரிக்காவிட்டால் வெவ்வேறு வங்கிகள் வெவ்வேறு அபராதங்கள் வசூலிக்கும் எனவும், அடுத்து வரும்மூன்று மாதங்களுக்கு உங்கள் சேமிப்பு கணக்கில் சராசரி மாத இருப்பை பராமரிப்பது பற்றி கவலைப்பட வேண்டாம். கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக தங்கள் வருவாயை இழக்க போகும்
வாடிக்கையாளர்களுக்கு அரசின் இந்த முடிவு உபயோகமாக இருக்கும்.

குறிப்பாக நாடு முழுவதும் இன்று முதல் முழு அடைப்பில் பங்கெடுத்துள்ள இந்த மிக முக்கியமான சுழலில் மட்டும் தான்நீங்கள் இந்த வசதியை பயன்படுத்த வேண்டும் என்றும், மேலும் 21நாட்களுக்கு வீட்டிலிருந்து வெளியே இறங்குவது நல்லதல்ல


Click it and Unblock the Notifications