பேஸ்புக்கில் ரெக்வெஸ்ட் கொடுத்து 35லட்சம் திருட்டு: அதிகமான ஆசை ஆபத்து
உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் இந்த பேஸ்புக் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர், குறிப்பாக இந்த பேஸ்புக் தளத்தின் மூலம் அன்மையில் பல்வேறு பிரச்சனைகள் வந்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

குமார் தாஸ்
இந்நிலையில் ஆந்திரா விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் குமார் தாஸ். இவருடைய பேஸ்புக்கில் பெண் பெயர் கொண்ட கணக்கில் இருந்து ஃப்ரண்ட் ரெக்வெஸ்ட் வந்துள்ளது. அதை அங்கீகரித்ததையடுத்து இருவரும் மெசேஞ்சரில் பேச தொடங்கியுள்ளனர்.

பின்பு குமார் தாஸை தொடர்பு கொண்ட அந்த பெண், பணி ஓய்வு பெற்ற உங்களை கௌரவிக்கும் விதமாக பரிசளிக்க
விரும்புகிறேன் என்றும், அதனால் மின்னணு வீட்டு உபயோகப் பொருட்கள் சிறு ஆபரணங்கள், 25 ஆயிரம் பவுண்ட்ஸ்பணம் ஆகியவற்றில் பார்சலில் அனுப்பி வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

சுங்கத்துறை அதிகாரி
இதனிடையே மற்றொரு பெண் தன்னை சுங்கத்துறை அதிகாரி என்றும் உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் நானும் இருக்கிறேன்என்றும் அறிமுகம் செய்துகொண்டார். அந்த பெணிணிடமும் குமார் தாஸ் தன்னுடைய செல்போன் எண்ணை பகிர்ந்துள்ளார்.

பின்பு அவரைத் தொடர்பு கொண்ட அந்த பெண் உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து தொகையுடன் ஏரளாமானஅளவில் பரிசுப்பொருட்களும் வந்திருக்கின்றன அவற்றுக்கு உரிய சுங்க கட்டணத்தை செலுத்தி பெற்று கொள்ளலாம்
என்று கூறியுள்ளார்.

காவல்துறையில் புகார்
பின்பு அவர் கூறியதை உண்மை என்று நம்பிக்கொண்டு குமார் தாஸ் அந்தப் பெண் கொடுத்த வங்கிக்கணக்கில் பல்வேறு
தவவணையாக 34லட்சத்துட 19ஆயிரத்து 450ஆயிரத்து 450வரை டெப்பாசிட் செய்தார். அதன்பின்பு அந்த பெண்கள்இரண்டு பேரையும் தொடர்பு கொள்ள இயலவில்லை.
ஏமாற்றப்பட்டதை அறிந்து குமார்தாஸ் விசாகப்பட்டினம் காவல்துறையில் புகார் கொடுத்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசாருக்கு மோசடி கும்பல் டெல்லியில் இருப்பது தெரியவந்தது.

கிஷன் லால்
உடனே டெல்லிக்கு சென்ற போலீசார் அங்கு ஹரியானாவை சேர்ந்த கிஷன் லால் உட்பட நைஜீரிய நாட்டைச் சேர்ந்த2பேரை கைது செய்தனர். இந்த விசாரணையில் கிஷன் லால் நைஜீரிய நாட்டை சேர்ந்த இருவருடம் கூட்டணி
அமைத்து பேஸ்புக்கில் நட்பு வட்டாரத்தை ஏற்படுத்தி இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

95சிம்கார்டுகள்
குறிப்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2லட்ச ரூபாய் தொகை, 95சிம்கார்டுகள், ஐந்து ஏஎடிம் கார்டுகள், 7மொபைல் போன்கள் காலாவதியான பாஸ்போர்ட்டுகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர் என்பது தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications