வியர்வையை கொண்டு மன அழுத்தத்தை கண்டறியும் வாட்டர் ப்ரூப் பட்டை கண்டுபிடிப்பு.!
மேலும் உடலில் உள்ள வியர்வை பட்டையில் உள்ள நீர்தேக்கம் போன்ற பகுதியல் சேமிக்கப்படும்,பின்பு இவற்றின் மீது கார்டிசலை உணரும் சவ்வு பொருத்தப்பட்டுள்ளது.
இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்து மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும், மேலும் உடலில் வியர்வையை கொண்டு மன அழுத்தத்தை கண்டறியும் வாட்டர் ப்ரூப் பட்டையை
கண்டுபிடித்துள்ளனர் ஆய்வாளர்கள்.

இந்த சாதனத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் நம் தோழில் ஒட்டுக் கொண்டதும் வியர்வையை உறிந்து கொண்டு கார்டிசல் அதவாது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோனை (இயக்குநீர்) சில நிமிடங்களில் கண்டறிந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்டர் ப்ரூப் பட்டை
இப்போது மருத்துவமணையில் சோதிக்கப்படும் சில ஆய்வங்கங்களில் இருந்து கிடைக்கும் முடிவுகளை தெரிந்துகொள்ள குறிப்பிட்ட நேரம் அல்லது குறிப்பிட்ட நாள் வரை காத்திருக்க வேண்டும், ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்ட வாட்டர் ப்ரூப் பட்டை இன்னொரு சாதனத்துடன் இணைத்தால் போதும் நில நிமிடங்களில் மன
அழுத்தம் சார்ந்த விவரங்களை தெரிந்துகொள்ள முடியும்.

சோதனைமுறையில்
இப்போதுவரை இந்த வாட்டர் ப்ரூப் பட்டையை சோதனைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் இந்த சாதனம் வெற்றிபெறும் பட்சத்தில் மன அழுத்த அளவு சீராக இல்லாத நிலையில் மனிதர்கள் வீட்டில் இருந்தபடியே முடிவுகளை
அறிந்துகொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

செவ்வக வடிவம்:
வாட்டர் ப்ரூப் பட்டை பொறுத்தவரை செவ்வகம் வடிவத்தைக் கொண்டுள்ளது,அதன்பின்பு நீட்டிக்கத்தக்க சென்சார் பின்பு
மெம்பிரேன் கார்டிசலுடன் இணைத்துக் கொள்ளுவகையில் இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நீர்தேக்கம்:
மேலும் உடலில் உள்ள வியர்வை பட்டையில் உள்ள நீர்தேக்கம் போன்ற பகுதியல் சேமிக்கப்படும்,பின்பு இவற்றின்
மீது கார்டிசலை உணரும் சவ்வு பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாதனம்.


Click it and Unblock the Notifications