அலெர்ட்! ஆப் வழியாக ஸ்வீட் ஆர்டர் செய்து ரூ.2.4 லட்சத்தை இழந்த மும்பை பெண்!
தற்போது ஆன்லைன் ஆர்டர் பழக்கம் மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக மளிகை பொருட்களில் தொடங்கி, மருந்து, உணவு, உடை, கேட்ஜெட் பொருட்கள் உட்பட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது.

தீபாவளி
அதுவும் சில ஆன்லைனில் பொருட்கள் அல்லது உணவு, கேட்ஜெட் போன்றவற்றை வாங்கும் போது சில சலுகைகள் கிடைக்கிறது. எனவே தான் மக்கள் ஆன்லைனில் வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் தீபாவளிக்காக பெண் ஒருவர் ஆன்லைனில் ஸ்வீட்ஸ் ஆர்டர் செய்திருக்கிறார், அதன்பின் நடந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது மும்பையை அடுத்த அந்தேரி எனும் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக ஆன்லைன் மூலம்ஸ்வீட்ஸ் ஆர்டர் செய்ய முடிவு செய்துள்ளது.

பூஜா ஷா
அதன்படி பூஜா ஷா என்ற அந்த 49 வயது பெண் ஆப் (செயலி) ஒன்றின் மூலம் ஸ்வீட்ஸ் ஆர்டர் செய்ய முயன்றுள்ளார். பின்பு இதற்கான கட்டணமாக 1000 ரூபாயை ஆன்லைன் மூலம் செலுத்தும் போது, பணப் பரிவர்த்தனை தோல்வி அடைந்ததாகக் கூறப்படுகிறது.

ஆன்லைன்
தொடர்ந்து பணம் செலுத்தப் பல முயற்சிகள் செய்த பிறகும் பூஜாவால் செலுத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது. அதன்பின்பு அந்த ஸ்வீட் கடையின் நம்பரை ஆன்லைன் மூலம் எடுத்து நேரடியாக அந்த கடைக்கு அழைத்து பேசி உள்ளார். தொடந்து பூஜாவிடம் பேசிய நபர், கிரெடிட் கார்டு எண் மற்றும் ஓடிபி ஆகியவற்றைக் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்
இதனை முழுவதும் நம்பி பூஜாவும் அனைத்து விவரங்களை அந்த நபரோடு பகிர அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கில் இருந்து சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வரை பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே ஆயிரம் ரூபாய்கு இனிப்பு வாங்க ஆசைப்பட்டு லட்ச ரூபாய் பறிபோனதால் உச்சக்கட்ட அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார் பூஜா.

மேலும் இதனை தொடர்ந்து உடனடியாக போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் ஒன்றை அளித்துள்ளார் பூஜா. பின்பு இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், சுமார் 2,27,000 ரூபாய் வரை மற்ற வங்கிக் கணக்கில் செல்வதைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

விசாரணை
குறிப்பாக இந்த ஆன்லைன் பண மோசடியில் ஈடுபட்ட அந்த மர்ம நபர்கள் பற்றியும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஏமாறுவது குற்றமல்ல, மீண்டும் மீண்டும் ஏமாறுவது தான் பெரிய குற்றம்.பரந்து விரிந்த ஆன்லைன் கடலில் பல நன்மைகளும் இருக்கின்றது, நன்மையை விட தீயதும் அதிகமாகவே இருக்கின்றது. இங்கு கவனமாக இல்லையெனில் ஆபத்து நிச்சயம்.

குறிப்பாக ஆன்லைன் நிறுவனங்களின் குறிப்பிட்ட செயலியைப் பயன்படுத்து மட்டுமே நல்லது. அதேபோல் ஆன்லைனில் உள்ள போன் நம்பர்களை எடுத்து அதன் மூலம் பணம் செலுத்தவோ அல்லது வங்கி விபரங்களைச் சொல்லவோ கூடாது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications