சோலார் மின் உற்பத்திக்காக அசுர வேகம் காட்டும் தமிழ்நாடு.! முதல்வரின் கனவு என்ன?
சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் வகையில் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் ஒரு திட்ட அறிக்கையை தயார் செய்துள்ளது.
சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் வகையில் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் ஒரு திட்ட அறிக்கையை தயார் செய்துள்ளது. அரசு சார்பற்ற நிறுவனத்துடன் இணைந்து புதுப்பிக்கதக்க ஆற்றல்களில் ஒன்றான சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கவும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் தமிழ்நாடு சோலார் எரிசக்தி கொள்கையின்படி இந்த ஆண்டில் இந்த தமிழ்நாடு எரிச்சக்தி மேம்பாட்டு நிறுவனத்தின் பங்குதாரர்களிமிடருந்து கருத்துக்களை தெரிக்குமாறு அறிவித்துள்ளது.

சூரிய எரிசக்தியின் நோக்கம்:
சூரிய சக்தி ஆற்றல் உற்பத்திற்காக பல்வேறு ஊக்குவிப்புகளை வழங்கின்றது. சூரிய சக்திகள் சூரிய மின்சக்தி, இன்வெட்டர்கள், பெருகி வரும் கட்டமைப்புகள் மற்றும் மின்கலன்கள் உட்பட சூரிய சக்திகளின் உற்பத்தியை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

முதல்வர் அறிவிப்பு:
கடந்த 2012ம் ஆண்டே சூரிய ஆற்றல் கொள்ளை உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மாநிலத்தின் முக்கிய ஆதாரமாக சூரிய ஆற்றல் விளங்கும். ஒரு நிலையான ஆற்றலாக இருக்கின்றது. மேலும் 2022ல் தமிழ்நாட்டில் முக்கியகாரணியாக விளங்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கிரீன் வேலை வாய்ப்புகள்:
இந்ததுறை வளர்ச்சியால் கணிசமான எண்ணிக்கையில் மக்களுக்கு கிரீன் வேலைகளை வழங்கும். மேலும் 2022ம் ஆண்டில் தமிழ்நாடு சர்வசே வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு தலைசிறந்த காலநிலை தலைவராக இருக்கும்.
சூரிய ஆற்றல் மூலம் தமிழ்நாடு 2022ம் ஆண்டில் 8224 மெகாவாட் மின் சக்தியை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த இலக்கில் 40 சதவீதம் நுகர்வோர்களின் தேவைகளை சோலார் பேன்கள் மூலம் நிறைவேற்றப்படும்.

தமிழ்நாட்டில் புதிய சோலார் கொள்ளை:
சூரிய மின் அழுத்த ஆற்றல் மற்றும் சூரிய வெப்ப ஆற்றலுடன் தொடர்புடைய திட்டங்கள் நிரல்கள் மற்றும் நிறுவுதல்களுக்கு இந்த கொள்ளை ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
வரைவு திட்ட கொள்கையின்படி சோலார் எரிசக்தியின் மூலம் பொது கட்டிடங்களுக்கு 30 சதவீதம் சோலார் எரிசக்தியின் மூலம் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிலம் தேர்வு செய்யப்படுகின்றது:
மேலும் சோலார்களை பெறுவதற்காக மானியமும் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்திலும் சோலார் மின்சாரம் பயன்படுத்தப்படும். அரசு வாகனங்களும் 2022ம் ஆண்டுக்குள் மாற்றி அமைக்கப்படும். சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்க நிலங்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications