Home
News

ஜன.1 முதல் அமலுக்கு வரும் 5 புதிய விதிகள்.. SIM CARD முதல் INCOME TAX ரிட்டர்ன் வரை.. 2024-ல் என்னென்ன மாறும்?

2024 புத்தாண்டு ஆரம்பமானதுமே சிம் கார்டுகளி ல் இருந்து வருமான வரி கணக்கு தாக்கல் வரையிலாக சாமானிய மக்களை பாதிக்கும் பல்வேறு புதிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் அமலுக்கு வரவுள்ளன. அப்படியாக ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் 5 முக்யமான மாற்றங்களின் பட்டியல் இதோ:

01. பேங்க் லாக்கர் ஒப்பந்தங்கள் ( Bank Locker Agreements): வங்கிகளில் லாக்கர்களை வைத்திருக்கும் நபர்களுக்கு, ஒரு முக்கியமான காலக்கெடு உள்ளது. டிசம்பர் 31 க்குள், திருத்தப்பட்ட வங்கி லாக்கர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு பணத்தை டெபாசிட் செய்வதற்கான விருப்பம் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. தவறினால் ஜனவரி 1 ஆம் தேதி முதல் லாக்கர்கள் முடக்கப்படும்.

ஜன.1 முதல் அமலுக்கு வரும் 5 புதிய விதிகள்.. 2024-ல் என்னென்ன மாறும்?

2. காப்பீட்டு கொள்கை (Insurance Policy): ஜனவரி 1 முதல், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Insurance Regulatory and Development Authority of India - IRDAI) அனைத்து காப்பீட்டு நிறுவனங்களையும், பாலிசிதாரர்களுக்கு வாடிக்கையாளர் தகவல் தாளை (Customer information sheet) வழங்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளது. இந்த ஆவணம் காப்பீடு தொடர்பான முக்கியமான தகவல்களை எளிய சொற்களில் பயனர்களுக்கு விளக்கும்.

3. வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax Return Filing) : ஜனவரி 1 முதல், 2022 - 2023 (AY-2023-24) நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய தவறிய வரி செலுத்துவோர்கள், இனி தாமதமான வருமானத்தை (Belated returns) தாக்கல் செய்ய முடியாது.

ஜன.1 முதல் அமலுக்கு வரும் 5 புதிய விதிகள்.. 2024-ல் என்னென்ன மாறும்?

கூடுதலாக, தங்கள் வருமானத்தில் பிழைகள் (Errors) உள்ள தனிநபர்கள் திருத்தப்பட்ட வருமானத்தை (Revised return) சமர்ப்பிக்கவும் முடியாது. புதுப்பிக்கப்பட்ட இந்த விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்ய அனைத்து வரி செலுத்துவோருக்கும், இது வருவாமன வரித்துறையிடம் இருந்து வரும் ஒரு முக்கியமான நினைவூட்டல் ஆகும்.

4. சிம் கார்டு விதிமுறைகள் (SIM Card Regulations): புதிய டெலிகாம் பில் அமலுக்கு வந்ததன் மூலம் சிம் கார்டுகளை வாங்குதல் மற்றும் பராமரிப்பது போன்றவற்றின் லேண்ட்ஸ்கேப் (Landscape) மாற்றம் அடைந்து வருகிறது. ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் முயற்சியில், சிம் கார்டுகளை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் அரசாங்கம் கடுமையான விதிகளை அறிமுகப்படுத்துகிறது.

ஜன.1 முதல் அமலுக்கு வரும் 5 புதிய விதிகள்.. 2024-ல் என்னென்ன மாறும்?

இனி, சிம் கார்டை பெறுவதற்கு டிஜிட்டல் வழியிலான நோ யுவர் கஸ்டமர் (Know Your Customer) செயல்முறை, அதாவது கேஒய்சி செயல்முறை கட்டாயமாக்கப்படும். தொலைத்தொடர்பு நிறுவனங்கள், சிம் கார்டு வாங்கும் செயல்முறையின் (SIM card acquisition process) போது வாடிக்கையாளர்களின் பயோமெட்ரிக் தரவை (Biometric data) வழங்க வேண்டும்.

மீறி போலி சிம் கார்டுகளை (Fake SIM Cards) வைத்திருந்தால், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். கூடுதலாக, சிம் விற்பனையாளர்கள் இப்போது முழுமையான சரிபார்ப்புக்கும் உட்படுத்தப்படுவார்கள், மேலும் சிம் கார்டுகளை மொத்தமாக விநியோகிப்பதும் (Bulk distribution of SIM cards) தடைசெய்யப்படும்.

5. இன்சூரன்ஸ் டிரினிட்டி திட்டம் (Insurance Trinity Project): இன்சூரன்ஸ் டிரினிட்டி திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இன்சூரன்ஸ் சுகம், இன்சூரன்ஸ் எக்ஸ்டென்ஷன் மற்றும் இன்சூரன்ஸ் கேரியர் தயாரிப்புகளை உள்ளடக்கிய இந்த திட்டம் பல்வேறு இலக்குகளை அடைய முயல்கிறது.

இந்த முயற்சி (பீமா சுகம் மூலம் தயாரிப்புகள் அல்லது சேவைகளை வாங்குவதை எளிமையாக்குவது முதல் காப்பீட்டு விரிவாக்கம் மூலம் மலிவு விலையில் காப்பீடு பாதுகாப்பை வழங்குவது வரையிலாக) காப்பீட்டு கேரியர்கள் மூலம் பெண்களின் அதிகாரமளிப்புக்கு பங்களிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த தயாரிப்புகளின் அதிகாரப்பூர்வ வெளியீடு 2024 ஜனவரி அல்லது அதற்கு பிறகான புதிய ஆண்டில் வெளியாகும் என்னு எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New rules For SIM card Insurance Policy Income Tax Return Effect from January 1 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X