Home
News

பேங்க் மினிமம் பேலன்ஸ்.. ஏப்.1 முதல் புது ரூல்ஸ்.. 2 ஆண்டுகள் கெடு.. ஆர்பிஐ போட்ட உத்தரவு!

வங்கியில் மினிமம் பேலன்ஸ் அபராதத்தை (Minimum Balance Charges) பார்த்து கடுப்பாகும் நபர்களின் வயிற்றில் பாலை வார்க்கும்படியான உத்தரவை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (Reserve Bank of India) அனைத்து வங்கிகளுக்கும் அதிரடியாக அனுப்பியிருக்கிறது. இதுகுறித்த முழு விவரம் இதோ.

"இப்போதெல்லாம், வங்கியில் நம்ம பணத்தை எடுக்கவும், பராமரிக்கவுமே ஆயிரத்தெட்டு ரூல்ஸ் வந்திருச்சு" என்று உச்சுக்கொட்டும் பலரை பார்த்திருப்போம். அதிலும், மினிமம் பேலன்ஸ் என்ற ரூல்ஸ் பலருக்கும் பெரும் தலைவலியாகவே இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஒரு ரூ.1000 பணத்தை அப்படியே வைத்துவிட்டு, பல மாதங்கள் கழித்து பின்பு எடுக்க சென்றால், அது முழுவதும் இருக்காது.

பேங்க் மினிமம் பேலன்ஸ்.. ஏப்.1 முதல் புது ரூல்ஸ்.. 2 ஆண்டுகள் கெடு!

சிறிது விவரம் தெரிந்தவர்களுக்கு மினிமம் பேலன்ஸ் அபாரதம் போட்டுவிட்டார்கள் என்று தெரிந்துவிடும். ஆனால், அதைப்பற்றி அறியாத சாதாரண மக்கள் அந்த பணம் எங்கே போய்விட்டது என்று நினைத்து கவலைக்கே சென்றுவிடுகின்றனர். இன்னும் சிலர், மாத கடைசியில் வேறு பணம் இல்லாமல், வங்கியில் இருக்கும் ரூ.1000 அல்லது ரூ.500-யை எடுக்க சென்றால், அப்போதும் அந்த பணம் அபராத பிடித்தம் செய்யப்பட்டிருக்கும்.

இதுபோன்று பல கதைகள் மினிமம் பேலன்ஸ் அபராதத்தை சுற்றியிருக்கிறது. இதற்கு வங்கி கணக்கை முறையாக பராமரிக்காததுதான் காரணம் என்பதையும் மறுக்க முடியாது. இப்படிப்பட்ட மினிமம் பேலன்ஸ் அபராதத்துக்கு புதிய விதிகளை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா கொண்டுவந்துள்ளது. இதுதொடர்பான விதிமுறைகளை அனைத்து வங்கிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.

ஆர்பிஐ மினிமம் பேலன்ஸ் ரூல்ஸ் (RBI Minimum Balance Rules) என்ன சொல்கிறது? இந்த புதிய விதிமுறைகளின்படி 2 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு பணப்பரிவர்த்தனையும் செய்யாத வங்கி கணக்குகளில் இருந்து எந்தவித மினிமம் பேலன்ஸ் அபாராதமும் வசூலிக்கப்படக்கூடாது. ஏனென்றால், அந்த வங்கி கணக்குகள் செயலற்ற கணக்குகளாக (Inoperative Accounts) எடுத்து கொள்ளப்பட வேண்டும்.

ஒருவேளை கல்வி உதவித் தொகை, அரசு மானிய உதவித் தொகை பெரும் நோக்கில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளாக இருந்தால், அவற்றை செயலற்ற கணக்குகளாக கருத கூடாது. இந்த கணக்குகளில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித பரிவர்த்தனையும் மேற்கொள்ளவில்லை என்றாலும் இவை செயலில் உள்ள கணக்குகளாகவே கருதப்பட வேண்டும்.

அதேபோல இந்த கணக்குகள் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்களாக இருக்கும் என்பதால், அதிலும் எந்தவித மினிமம் பேலன்ஸ் அபாராதமும் வசூலிக்கப்பட கூடாது. அதுமட்டுமல்லாமல், இந்த புதிய விதிமுறைகளின்படி, செயலற்ற கணக்குகளை மீண்டும் ஆக்டிவேட் செய்ய கட்டணம் வசூலிக்கப்பட கூடாது. அதேபோல தொடங்கும்போது, முந்தைய பராமரிப்பை சொல்லி அபராதமும் கேட்கப்பட கூடாது.

மேலும், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிக்காமல் செயலிழந்துவிட்ட கணக்குகள் குறித்து அதன் உரிமையாளருக்கு எஸ்எம்எஸ், கடிதங்கள் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும். அப்போதும், செயல்படாத கணக்கின் உரிமையாளர் பதிலளிக்காத பட்சத்தில், கணக்கு வைத்திருப்பவரை அறிமுகப்படுத்திய நபரை தொடர்பு கொள்ள வேண்டும்.

மேற்கூறிய விதிமுறைகள் மினிமம் பேலன்ஸ் அபதாரத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகள் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி 2024ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளன. இருப்பினும், வங்கி கணக்குகளின் இரண்டு ஆண்டுகள் இடைப்பட்ட காலத்தில் மினிமம் பேலன்ஸ அபராதம் வசூலிக்கப்படலாம். ஆனால், 2 ஆண்டுகளுக்கு மேல் வங்கியில் இருக்கும் பணம் அப்படியே இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New RBI Rules From April 1 2024 No Minimum Balance Charges On Inoperative Bank Accounts
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X