Just In
- 10 hrs ago ஏர்டெல் VS ஜியோ: ரூ.49 ரீசார்ஜ் திட்டம்.. அதிக சலுகைகளை வழங்கும் நிறுவனம் எது?
- 12 hrs ago மிரளுது விற்பனை.. ரூ.21,000 போதும்.. 43 இன்ச் OnePlus டிவி.. 4K வீடியோ.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?
- 18 hrs ago அடிச்சான் பாரு ஆப்பிள்.. iPhone 15 மீது அதிரடி சலுகை.. ஸ்ட்ரைட்டா ரூ.10,000 விலை குறைப்பு.. உடனே வாங்குங்க..
- 20 hrs ago OnePlus TV வச்சி இருப்பவர்களின் தலையில் இடி.. வாரண்டிக்கு வேட்டு.. கடை க்ளோஸ்.. புதுசாவும் வாங்க வேண்டாம்!
Don't Miss
- Automobiles 118மீ நீளமுள்ள சொகுசு படகை வாங்கிய ஃபேஸ்புக் ஓனர்.. இது கப்பலா இல்ல மிதக்கும் அரண்மனையா! வீடே தேவைப்படாது போல!
- Lifestyle Today Rasi Palan 25 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் அவசர முடிவு அவஸ்தையில் முடிய நேரிடலாம்...
- News ஐஏஎஸ்ஸாக இருந்தால் முடியாது.. பாசிச சக்திகளை முறியடிக்கவே அரசியல்.. சசிகாந்த் செந்தில் அதிரடி
- Sports தலை குனிந்த ஹர்திக் பாண்டியா.. பழி வாங்கிய குஜராத் கோச்.. மண்ணைக் கவ்விய மும்பை இந்தியன்ஸ்
- Finance 10 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ. 14 லட்சம் என உயர்த்திய மல்டிபேக்கர் பங்கு..!
- Movies Director Siva: கங்குவா படத்தால் கிடைத்த கவனம்.. பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் சிறுத்தை சிவா!
- Education ஃபயர்மேன் பணியிடத்தில் வேலை செய்ய அழைக்கிறது கடற்படை...!!
- Travel தென் தமிழகத்தின் சொர்க்கத்துக்கு ‘விசிட்’ பண்ண மறக்காதீங்க...!
அதிரடி அறிவிப்பு., விண்ணப்பித்த 15 நாட்களில் புதிய ரேஷன் கார்ட் வழங்கப்படும்: ஆளுநர்.!
தற்போது வந்த தகவலின்படி, புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தால் 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். அதாவது தமிழக அரசின் 16-வது முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
15 நாட்களுக்குள் ஸ்மார்ட்கார்டு வழங்கப்படும்
குறிப்பாக அவையை தொடங்கிவைத்து பேசிய ஆளுநர் தமிழக அரசின் பல்வேறு முக்கிய அம்சங்களையும் திட்டங்களை விவரித்தார்.
பின்பு அதில் தான் ரேஷன் கார்ட் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டார். அதன்படி புதிதாக குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) விண்ணப்பிப்வர்களுக்கு15 நாட்களுக்குள் ஸ்மார்ட்கார்டு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்த கொரோனா காலத்தில் ஏற்பட்ட சிக்கல்களை சமாளிக்க தமிழக அரசு 2.10 லட்சம் ரேஷன் அட்டடைதாரர்களுக்கு தலா ரூ.4000 கொரோனா நிவாரண நிதியாக அறிவித்து. தற்போது, விண்ணப்பித்த 15 நாட்களில் புதிய குடும்ப அட்டை பெற்றுக்கொள்ளலாம் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.
குடும்ப அட்டை (ரேஷன் கார்ட்) என்பது முக்கிய ஆவணங்களில் பிரதான ஒன்று. அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றான ரேஷன் கார்ட்கள் மூலம் ரேஷன் பொருட்கள் உட்பட அரசு திட்ட நன்மைகள் வரை வழங்கப்பட்டு வருகின்றன. புதிதாக மணமுடித்த தம்பதிகளுக்கான குடும்ப உறுப்பினர்கள் அட்டை, அவர்களது பெயர்கள் நீக்குவது, புதிய ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பது, புதிதாக பிறந்த குழந்தைகளின் பெயர் சேர்ப்பது உட்பட பல்வேறு தேவை ஏற்படும்.
புதிய ரேஷன் கார்ட் விண்ணப்பம் செய்வது எப்படி
அதேபோல் புதிய ரேஷன் கார்ட்கள் விண்ணப்பிக்காதவர்கள் வரும் காலக்கட்டத்தில் அரசு வழங்கும் சலுகை வேண்டும் என்றால் புதிய ரேஷன் கார்ட்கள் விண்ணப்பிபப்பது கட்டாயமாகும். அதற்கு https://tnpds.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று மின்னணு அட்டை சேவை என்பதை கிளிக் செய்து விண்ணப்பம் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
விவரங்கள் சரியாக உள்ளிட வேண்டும்
புதிய விண்ணப்பம் என்பதை தேர்வு செய்தவுடன் அதில் குடும்ப உறுப்பினர் தலைவர் பெயர் என்ற பாக்ஸ் கீழ் ஆங்கிலம் மற்றும் தமிழில் தங்களது பெயரை பிழையின்றி பதிவிட வேண்டும். பின் அதில் காட்டப்படும் முகவரி, மாவட்டம், கிராமம், தாலுகா, அஞ்சல் குறியீடு,மொபைல் எண் உள்ளிட்ட தகவலை சரியாக பதிவிட வேண்டும். இந்த தகவல் அனைத்தையும் பிழையின்றி சரியாக பதிவிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
உறுப்பினர் சேர்க்கை சரியாக பதிவிட வேண்டும்
எந்தவகை அட்டை என்பதை தேர்வு செய்து உறுப்பினர் சேர்க்கைகளை பதிவிட வேண்டும். அதன்பின் ஆதார் அட்டையை ஸ்கேன் செய்து அப்லோட் செய்ய வேண்டும், சேமிப்பு என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆவணம் இருந்தால் அப்லோட் செய்யவும் இல்லையென்றால் பிறப்பு சான்றிதழ் போதுமானது. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மேற்கொள்ளும் போதும் புதிய
ரேஷன் கார்ட்கள் பதிவு செய்யும் போதும் முன்னதாக இருந்த ரேஷன் கார்ட்களில் பெயர்கள் நீக்கப்படுவது கட்டாயமாகும்.
அனைத்து தகவல்கள் சரிபார்ப்பு
இதை அனைத்தையும் பதிவிட்ட பிறகு தாங்கள் பதிவிட்ட அனைத்து தகவல்களையும் சரிபார்க்கவும் இதை அனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில் சரிதான் என்ற தேர்வை உறுதிசெய் என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
அதிகாரிகள் ஒப்புதல் உடன் ரேஷன் கார்ட் அதிகாரிகள் ஒப்புதல் உடன் ரேஷன் கார்ட்
இந்த விண்ணப்பம் அனைத்தும் சமர்பிக்கப்பட்ட பிறகு கிடைக்கும் குறிப்பு எண் குறித்து வைத்துக் கொள்ளவும். காரணம், இந்த குறிப்பு எண் வைத்து தங்களது புதிய அட்டை நிலையை அறிந்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி இதன்பின் ஆதார்கார்ட், போட்டோ உள்ளிட்ட சான்றிதழ்களை தாலுகா அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். இவை அனைத்தும் நிறைவு பெற்ற பிறகு ஆவண சரிபார்ப்பில் தொடங்கி துறை வாரியாக அதிகாரி ஒப்புதல் வழங்கப்படும் இதன்பின் உங்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படும். பெயர் திருத்தம் உள்ளிட்ட விவகாங்களுக்கு பயனர்கள் முதலில் ஆதார் அட்டையில் சரி செய்ய வேண்டும். இதன்பின் ஆதார்அட்டையை உணவுத்துறை அதிகாரியிடம் சமர்பித்து ரேஷன் கார்டில் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470