சத்தமில்லாமல் விற்பனைக்கு வந்த ஆப்பிள் நியூ ஐபேட்!

By Super
|
சத்தமில்லாமல் விற்பனைக்கு வந்த ஆப்பிள் நியூ ஐபேட்!

உலக மக்களால் அதிக ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட நியூ ஐபேட் டேப்லட் இன்று ஆஸ்ட்ரேலியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதான் இப்போதைய மின்னணு சாதன உலகின் ஒரு ஹாட் நியூஸ்.

இதனால், நாஸ்டாக் ஸ்டாக் பங்கு மார்க்கெட்டில், ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.30,000 விலைக்கு மேல் எட்டி இருப்பது இதுவே முதல் முறை. இன்று ஆஸ்ட்ரேலியா, ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளில் முதலில் ஆப்பிளின் இந்த நியூ ஐபேட் டேப்லட் வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவில் ஐபேட் என்ற பெயரில் ஏற்கனவே எலக்ட்ரானிக் சாதனங்கள் இருப்பதால், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் டேப்லட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் அதன் பிறகும் தொழில் நுட்ப அஸ்த்திரமாக நியூ ஆப்பிள் ஐபேட் டேப்லட்டை உலக நாடுகளில் வெளியிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம். இதில் அதிக விற்பனையை எட்டி வெற்றியும்

காணும் என்றும் எதிர் பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும் அமெரிக்கா, கனடா, ஃபிரான்ஸ், பிரிட்டன் உள்பட 10 நாடுகளில் இந்த புதிய ஆப்பிள் நியூ ஐபேட் இன்று வெளியாகும் என்று தகவல்கள் கூறுகின்றன. ஆப்பிள் சத்தமில்லாமல் விற்பனை ரீதியில் என்ன சாதனையை செய்ய போகிறது என்பதையும் பார்க்கலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X