புதிய வருமான வரி விதிகள்.. இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. மீறினால் அபராதம், 84% வரி கட்டணும் ஜாக்கிரதை!
புதிய வருமான வரி விதிமுறைகளின் (New Income Tax Rules) விளைவாக, இந்தியாவில் பண பரிவர்த்தனைகள் ஆனது கூடிய விரைவில் கடுமையான செலவில் முடிவடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. முதலீட்டு வங்கியாளர் சர்தக் அஹுஜாவின் (Investment banker Sarthak Ahuja) கூற்றுப்படி, சோதனையின் போது கண்டுபிடிக்கப்படும் விவரிக்கப்படாத ரொக்கம் இப்போது அபராதங்கள், கூடுதல் கட்டணங்கள் மற்றும் செஸ் உட்பட 84% வரியை ஈர்க்கக்கூடும் என்று எச்சரிக்கிறார்.
ரொக்கத்தின் விலை இப்போது அதிகரித்துள்ளது: என்டிடிவி-யின் (NDTV) சமீபத்திய அறிக்கையின்படி அஹுஜாவின் பதிவு, இந்தியாவின் திருத்தப்பட்ட ரொக்க கையாளுதல் விதிகளின் முக்கிய விதிகளையும், அவற்றை மீறும் தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு இப்போது பொருந்தும் கடுமையான அபராதங்களையும் கோடிட்டு காட்டுகிறது.

இப்போது நடைமுறைக்கு வரும் விதிமுறைகளை அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என்று அஹுஜா குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் வருமான வரித் துறையின் சோதனை அல்லது பறிமுதல் செய்யும் போது ஒருவரின் வளாகத்தில் விவரிக்கப்படாத பணம் கண்டுபிடிக்கப்பட்டால் 84% வரி பொறுப்பு பொருந்தும் என்று வலியுறுத்தி உள்ளார்.
வரித்துறைக்கு எப்படித் தெரியும்? பெரிய அளவிலான பணப் பரிமாற்றங்கள் குறித்து வரித்துறைக்கு தானாகவே அறிவிக்கப்படும் என்றும் அஹுஜா குறிப்பிடுகிறார்: அதாவது ஒரு நிதியாண்டில் நீங்கள் ரூ.10 லட்சத்திற்கு மேல் பணத்தை எடுத்தால், உங்கள் வங்கி அதை வருமான வரித் துறையிடம் தெரிவிக்கும்.
நீங்கள் ரூ.20 லட்சத்திற்கு மேல் பணம் எடுத்தால், வங்கி அந்த தொகைக்கு டிடிஎஸ் கழிக்கும். மீண்டும் மீண்டும் பெரிய அளவிலான பணத்தை எடுத்தால், குறிப்பாக ஆதாரம் தெளிவாக இல்லாவிட்டால், துறை வாரியான சோதனை அல்லது பறிமுதல் செய்ய தூண்டப்படலாம். சந்தேகத்திற்குரிய பண பரிவர்த்தனைகளுக்கு எந்த சகிப்புத்தன்மையும் இல்லை என்றும் அஹுஜா குறிப்பிட்டுள்ளார்.
சில பரிவர்த்தனைகளுக்கு இப்போது 100% அபராதம் விதிக்கப்படுகிறது - அதாவது மொத்த தொகையை விட இரண்டு மடங்கு தொகையை நீங்கள் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். இதன் கீழ் ஒரு வாடிக்கையாளரிடமிருந்து ஒரு நாளில் ரூ.2 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக பெறுதல், சொத்தை விற்கும்போது ரூ.20,000 க்கு மேல் ரொக்கமாகப் பெறுதல் ஆகியவைகள் அடங்கும்.
இந்த விதிகள் மிகவும் உண்மையானவை மற்றும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன என்றும் அஹுஜா எச்சரிக்கிறார். உங்கள் பரிவர்த்தனைகள் குறித்து அவர்களிடம் உள்ள தகவல்களின் அளவை கொண்டு இன்றைய தேதிக்கு அரசாங்கத்தால் யாரையும் பிடிக்க முடியும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இப்போது இது ஏன் முக்கியம்? இந்த விதிகள் கருப்பு பணம், கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் மற்றும் முறைசாரா பரிவர்த்தனைகள் மீதான அரசாங்கத்தின் பரந்த ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாகும். பல விதிகள் புதியவை அல்ல என்றாலும், வங்கிகள், பதிவாளர்கள் மற்றும் வரி அதிகாரிகளுக்கு இடையே சிறந்த தரவுப் பகிர்வுடன் - அமலாக்கம் கடுமையாகிவிட்டது. பணத்தைக் கையாள பழகிய தனிநபர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு, செய்தி தெளிவாக உள்ளது: எல்லாவற்றையும் ஆவணப்படுத்துங்கள் அல்லது பணத்தை இழக்க நேரிடும்!
இதேபோல பான் (PAN) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பெர்மனென்ட் அக்கவுண்ட் நம்பர் (Permanent Account Number) வைத்து இருப்பவர்களுக்கான புதிய விதிகள் (New Rules) வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன.
சிபிடிடி (CBDT) என்கிற மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes) ஆனது - பான் நம்பரை ஆதார் உடன் இணைப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 31, 2025 என்று நிர்ணயம் செய்துள்ளது. இந்த ஆணை - வங்கி, நிதி பரிவர்த்தனைகள் மற்றும் வருமான வரி தாக்கல் ஆகிய நோக்கங்களுக்காக சிங்கிள், சரிபார்க்கப்பட்ட அடையாள அமைப்பை நிறுவுவதை நோக்கமாக கொண்டுள்ளது.
ஆக டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் பான்-ஆதார் இணைப்பை செய்து முடிப்பவர்களுக்கும் (மற்றும் ஏற்கனவே இதை செய்து முடித்து விட்டவர்களுக்கும்) 2026 ஜனவரி 1 ஆம் தேதி முதல் எந்த சிக்கலும், எந்த விதிமுறைகளும், எந்த இடையூறுகளும் இருக்காது. மறுபக்கம் பான்-ஆதார் இணைப்பை செய்யாதவர்கள் பல வகையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.


Click it and Unblock the Notifications








