நவம்பர் 1 முதல் அமல்... பேங்க் அக்கவுண்ட் வைத்து இருப்பவர்களுக்கு 2 புதிய விதிகள் அறிவிப்பு!
நவம்பர் 1 ஆம் தேதி முதல் பேங்க் அக்கவுண்ட் தொடர்பான 2 முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இதன் கீழ் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் (bank account holders) மற்றும் பேங்குகளில் லாக்கர் வசதியை பயன்படுத்துபவர்களுக்கு (Locker users) குறிப்பிடத்தக்க நன்மைகள் கிடைக்கும்.
இதற்கான திருத்தப்பட்ட பேங்கிங் லா திருத்தம் ஆக்ட் 2025 (Amendment Banking Law Act 2025) கீழான முக்கிய விதிகள் 2025 நவம்பர் 1 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று இந்திய அரசாங்கம் அறிவித்து உள்ளது. இந்திய அரசாங்கத்தின்படி இந்த சட்டத்தின் கீழ் - வங்கி கணக்குகளுக்கான நாமினீஸ், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் வங்கி லாக்கர்கள் ஆகிய பிரிவுகளில் மாற்றங்கள் வரும்.

இந்த புதிய விதிமுறைகளின் கீழ், அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் தங்கள் பேங்க் அக்கவுண்ட்களுக்கு நான்கு வேட்பாளர்களை (Nominees) நியமிக்கலாம். அவர்கள் ஒரே நேரத்திலோ அல்லது அடுத்தடுத்தோ நியமிக்கப்படலாம். இந்த மாற்றம் - அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கும், அவர்களின் வேட்பாளர்களுக்கும் உரிமைகோரல்களை செய்யும் போது செயல்முறையை நெறிப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
இருப்பினும் வங்கி லாக்கர்களை பொறுத்தவரை, அடுத்தடுத்து பரிந்துரைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். இதன் பொருள் முதல் வேட்பாளர் கிடைக்கவில்லை என்றால், இரண்டாவது வேட்பாளர் முன்னுரிமை பெறுவார், இது ஒரு மென்மையான மற்றும் தெளிவான உரிமைகோரல் செயல்முறையை உறுதி செய்யும்.
மேலும் நிதி அமைச்சகம் ஆனது ஆக்கபூண்ட் வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு வேட்பாளருக்கும் உரிமைகளின் சதவீதத்தை குறிப்பிட வேண்டும் என்றும் நிர்ணயித்துள்ளது. இது மொத்தம் 100% ஆக இருக்க வேண்டும். உதாரணமாக, நான்கு வேட்பாளர்களுடன், விநியோகம் முதல் வேட்பாளருக்கு 40%, இரண்டாவது வேட்பாளருக்கு 30%, மூன்றாவது வேட்பாளருக்கு 20% மற்றும் நான்காவது வேட்பாளருக்கு 10% ஆக இருக்கலாம்.
இதனொரு பகுதியாக - பல வேட்பாளர்களை நியமிப்பது, ரத்து செய்வது அல்லது மாற்றுவதற்கான நடைமுறைகள் மற்றும் படிவங்களை விவரிக்கும் பேங்கிங் கம்பெனீஸ் நாமினீஸ் விதிகள் 2025 (Banking Companies Nomination Rules 2025) விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் அனைத்து வங்கிகளிலும் ஒரே மாதிரியாகப் பயன்படுத்தப்படும்.
இந்த புதிய பேங்க் அக்கவுண்ட் விதிகள் ஆனது கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றன. இது உரிமைகோரல் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை, சீரான தன்மை மற்றும் செயல்திறனையும் ஊக்குவிக்கிறது. இந்த புதிய விதிமுறைகள் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கணிசமாக பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கிய கூட்டாளிகளை வேட்பாளர்களாக எளிதாக நியமிக்க முடியும், இதனால் அவர்களின் நிதி மற்றும் லாக்கர் கன்டென்ட்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். இந்த முயற்சி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வசதியானது மட்டுமல்லாமல் வங்கி அமைப்பையும் வலுப்படுத்துகிறது, பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கிறது.
நிதி சார்ந்த மற்ற சமீபத்திய அப்டேட்களை பொறுத்தவரை ஆதார்-பான் இணைப்பு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் பான் கார்டு வைத்திருக்கும் அனைவருமே 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தங்கள் பான் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், ஜனவரி 1, 2026 முதல் பான் கார்டு செயலிழக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை உங்கள் பாண் கார்டு செயல் இழந்து விட்டால்.. அதன் பிறகு நிதி அல்லது வரி தொடர்பான நோக்கங்களுக்காக உங்கள் பான் கார்ட்டை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும். இந்த காலக்கெடுவோடு சேர்த்து - புதிய பான் கார்டு விண்ணப்பதாரர்களுக்கான செயல்முறையின் ஒரு பகுதியாக ஆதார் சரிபார்ப்பும் நடக்கும்.


Click it and Unblock the Notifications








