புதிய ஆப் : ஸ்மார்ட்போன் சிக்னல் இல்லாத பகுதிகளில் கூட மக்களை கண்டுபிடிக்க முடியும்.!

ஸ்பெயினில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போன் ஆப் பயன்பாட்டை உருவாக்கியுள்ளனர், இது மொபைல் நெட்வொர்க்குகள் இல்லாத இடங்களில் கூட வேலைசெய்யும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash
|

பூகம்பங்கள், வெள்ளம் அல்லது வனப்பகுதிகளால் ஏற்படுகின்ற அவசரகால சூழ்நிலைகளில் விஞ்ஞானிகள் ஒரு ஸ்மார்ட்போன் ஆப் பயன்பாட்டை உருவாக்கியுள்ளனர், இந்த ஆப் பயன்பாடு பொறுத்தவரை ஸ்மார்ட்போன் சிக்னல் இல்லாத இடங்களில் கூட பயன்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் சிக்னல் இல்லாத பகுதிகளில் கூட பயன்படுத்த முடியும்.

ஸ்பெயினில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போன் ஆப் பயன்பாட்டை உருவாக்கியுள்ளனர், இது மொபைல் நெட்வொர்க்குகள் இல்லாத இடங்களில் கூட வேலைசெய்யும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் யுனிவர்சிட் டி அலிகன்டே (UA) ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த ஆப் அமைப்பு, தொலைதூர இடங்களில் தொலைதூர இடங்களில் விபத்து ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்து. தொலைபேசியின் சிக்னல் இல்லாமல் உயிர்களை காப்பாற்றுவதற்கு உதவி செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் சிக்னல் இல்லாத பகுதிகளில் கூட பயன்படுத்த முடியும்.

இந்த ஆப் பயன்பாடு பொறுத்தவரை சிக்னல் இல்லாமல் வைஃபை சிக்னல் மட்டுமமே வைத்து செயல்படும், மேலும் பல கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆப் மிக அருமையாக செயல்படும் என்று யு.ஏ தொழில்நுட்பம் பேராசிரியர் ஜோஸ் ஏஞ்சல் பெர்னா கூறினார்.

சிக்னலை கண்டறியும் பொருட்டு, ஆராய்ச்சியாளர்கள் மீட்பு அலைவரிசை மற்றும் மலை முகாம்களில் பயன்படுத்தக்கூடிய ஒரு ஒளி, சிறிய ஏற்பு சாதனம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இவற்றை கொண்டு இந்த ஆப் மிக அருமையாக செயல்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது வரும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் கண்டிப்பாக வைஃபை வசதி இருக்கும், மேலும் கூடிய விரைவில் இந்த ஆப் பயனுள்ள வகையில் அனைத்து இடங்களுக்கும் பயன்படும், அதன்பின் மொபைல் போன் சிக்னல் இல்லையென்றால் இந்த புதிய ஆப் மிக அருமையாக வேலை செய்யும் என்று கூறப்படுகிறது.

மலைப்பகுதிகளில் விபத்து அல்லது ஆபத்து ஏற்பட்டால் இந்த ஆப் மிக அருமையாக செயல்படும், ஸ்மார்ட்போன் சிக்னல் இல்லாத இடங்களில் கூட வேலை செய்யும் என்பதே இந்த ஆப் பயன்பாட்டின் சிறப்பு.

ஸ்மார்ட்போன் சிக்னல் இல்லாத பகுதிகளில் கூட பயன்படுத்த முடியும்.

ஒரு ஸ்மார்ட்போனிலிருந்து மொபைல் போன் சிக்னல்களை கண்டுபிடிப்பதற்கும், அதன் இருப்பிடத்தை முக்கோணத்தின் மூலம் கண்டுபிடிப்பதற்கும் சாதனங்களைக் கொண்டுள்ளன. ஆனால் அது 80,000 யூரோ (சுமார் ரூ .61 லட்சம்) செலவாகிறது மற்றும் ஒரு ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட வேண்டும் என்று பெர்னா கூறினார். ஆனால் இந்த புதிய ஆப் பயன்பாட்டின் மூலம் பல்வேறு நன்மைகள் உள்ளது, மேலும் குறைந்த செலவில் அதிக பயன்தரும் வகையில் இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது என பெர்னா தெரிவித்தார்

Best Mobiles in India

English summary
New app can locate people in areas without smartphone signal ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X