லாக்டவுனில் சிறார் ஆபாசப்படம் பார்ப்பது 95% அதிகரிப்பு.! பிரபல நிறுவனங்களுக்கு நோட்டீஸ்.!
இந்த கொரோனா காலத்திலும் சிறார் ஆபாச படங்களை பார்ப்பது 95சதவிகிதிம் அளவிற்கு உயர்ந்துள்ளதாக கூகுள், வாட்ஸ்அப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்புள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

கோவிட்-19 எனப்படும் கொரோனா முன்னெச்சரிக்கையாக இந்தியா முழுவதும் இரண்டு கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, ஆபாசப் படங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே இது தொடர்பாக அனுப்பப்பட்ட நோட்டீஸில் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சில செயலிகள் மூலம் குழுந்தைகளுக்கு எதிரனா ஆபாச பொருட்கள் அனப்பப்படுவது தொடர்பாக கூகுள் நிறுவனத்திற்கு கேள்வி எழுப்பபப்பட்டுள்ளது.

பின்பு என்கிரிப்டட் வாட்ஸ்அப் குழுக்களிலும் இது போன்ற பொருட்கள் கிடைப்பதாகவும், இதுபோன்ற குரூப்களில் இணைவதற்கான இணைப்பு அழைப்புகள் டிவிட்டரில் பகிரப்பட்டதையும், அவற்றை அனுமதிப்பது தொடர்பாகவும், பதில் அளிக்ககுமாறு வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டருக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

ஏற்கனவே வெளிவந்த தகவலின் அடிப்படையில், என்.சி.எம்.இ.சி அமைப்பு ஜனவரி 23 ஆம் தேதி வரையிலான இந்திய குழந்தைகள் பாதிப்பு குறித்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் ஜனவரி 23 ஆம் தேதிவரை, கடந்த ஐந்து மாதங்களில் 25,000 குழந்தைகள்ஆபாசப்படம் இந்தியாவில் இருந்து பல்வேறு இணையதளங்களில் பதிவேற்றம் செய்து உலாவருவதாக தெரிவித்துள்ளது.

இதிலும் இந்த பதிவேற்றமானது டெல்லியில் தான் அதிகம் நடந்துள்ளதாக என்.சி.எம்.இ.சி அமைப்பின் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அடுத்தக்கட்டமாக மகாராஷ்டிரா, குஜராத், உத்திரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் அது அரங்கேறியுள்ளது.

அதேபோல் மகாராஷ்டிராவின் மும்பை, தானே, புனே போன்ற பகுதிகளில் தான் இதுபோன்ற புகார்கள் அதிகமாக வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மகாராஷ்டிராவில் operation Black face என்ற தலைப்பில் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மட்டுமின்றி டெல்லி, குஜராத், கேரளா போன்ற பகுதிகளில் சைபர் கிரைம் பிரிவி போலீஸார்கள் சிலரை கைது செய்துள்ளனர்.
News Source:deccanchronicle.com


Click it and Unblock the Notifications