நாளை முதல் தேசிய மொபைல் நம்பர் போர்டபிலிட்டி அமல் படுத்தப்படுகின்றது..
இந்தியாவில் இருக்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள் நாளை முதல் தேசிய மொபைல் நம்பர் போர்டபிலிட்டி சேவையை வழங்க இருக்கின்றன. இந்த சேவையின் மூலம் வெளியூர்களுக்கு பயனம் மேற்கொள்ளும் போது அந்த மாநிலத்தில் பயன்பாட்டில் இருக்கும் சேவைக்கு மாற்றி கொள்ள முடியும்.

சந்தாதாரர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறாமல் இருக்க பல தொலைதொடர்பு நிறுவனங்களும் இலவச ரோமிங் வசதியை வழங்க துவங்கியுள்ளனர்.
இது குறித்து ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை பிரிவு தலைவர், புதிய சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் நம்பர்களை மாற்றாமல் இருக்கவும், போர்டபிலிட்டி செய்யும் காலத்தில் இலவச இன்கமிங் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆர்காம் நிறுவனமும் மொபைல் நம்பர் போர்டபிலிட்டி ஆப்ஷனினை ஜூலை 3, 2015 முதல் வழங்க இருக்கின்றது. இதோடு இந்நிறுவனம் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சலுகைகளை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications