நாசாவின் புதிய முயற்சி.! விண்வெளிக்கு கடல் வாழ் உயிரினங்களை அனுப்ப திட்டம்.!
நாசா அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் 5 ஆயிரம் நீர் கரடிகள் மற்றும் நீரில் ஒளிரும் தன்மை கொண்ட 128 சிறிய வகை மீன்களை விண்வெளியில் இருக்கும் ஆய்வு மையத்துக்கு ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

அண்மையில் வெளிவந்த தகவலின்படி,வரும் ஜூன் 3-ம் தேதி நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் 22-ஆவது செயற்கைக்கோளை விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. எனவே விண்வெளியில் அமைக்கப்பட்டிருக்கும் ஆராய்ச்சி மையத்துக்கு கடல் வாழ் உயிரினங்களான 5 ஆயிரம் நீர் கரடிகள் மற்றும் ஒளிரும் தன்மை கொண்ட 128 சிறிய வகை மீன்களை ராக்கெட் மூலம் நாசா அனுப்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த ராக்கெட்டில் சில சோலார் பேனல்களையும் அனுப்புகிறது நாசா அமைப்பு. மேலும் சிறிய வகை மீன்கள் மற்றும் நீர் கரடி போன்றவை தங்களுடைய ஆராய்ச்சியின் ஒரு பகுதிக்காக பயன்படுத்தப்படவுள்ளது என நாசா அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேபோல் கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட பெர்சவரன்ஸ் ரோவர் ஆனது கடந்த பிப்ரவரி மாதம் வெற்றிகரமாக செவ்வாயில்
தரையிறங்கியது. குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் தரைப்பகுதியில் ஆய்வு செய்து வரும் அந்த பெர்சவரன்ஸ் ரோவர் அங்கு காணப்படும் மலைகள், குன்றுகள், பாறைகள் என அனைத்தையும் மிகவும் தெளிவாக படம்பிடித்து காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்துடன் மிகச்சிறிய ரக ஹெலிகாப்டரும் செவ்வாய் கிரகத்தில் தரை இறக்கப்பட்டுள்ளது. மேலும் இன்ஜெனூட்டி என்று அழைக்கப்படும் இந்த அதிநவீன சிறிய ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு ஆய்வுக்கு
பயன்படுத்தப்படும் என்று தகவல்வெளிவந்துள்ளது.

பூமியைத் தவிர மற்றொரு கிரகத்தில் முதல்முறையாக ஹெலிகாப்டரை இயக்கி நாசா மிகப் பெரிய சாதனை படைத்துள்ளதுஎன்று தான் கூறவேண்டும்.இந்நிலையல் செவ்வாய் கிரகத்தில் இன்ஜெனூட்டி ஹெலிகாப்டர் ஆனது பறக்கும் சப்தத்தை நாசா வெளியிட்டுள்ளது.
அண்மையில் நாசா அமைப்பு ஹெலிகாப்டரை மீண்டும் பறக்க வைத்து முயற்சி மேற்கொண்டது. அப்போது சரியாக 2 நிமிடங்களில் 872 அடி தூரம் பறந்து இன்ஜெனூட்டி ஹெலிகாப்டர் சாதனை படைத்தது.

அதேபோல் ஹெலிகாப்டர் புறப்படும் போது அதன் இறக்கைகள் சழலும் சப்தத்தையும் நாசா அமைப்பு தற்சமயம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக வேறு கிரகத்தில் மற்றொரு விண்கலத்தின் சப்தத்தை பதிவு செய்தது இதுவே முதன் முறை என்று நாசா கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications