பூமியை நோக்கி வரும் ஆபத்தான சிறுகோள்- விண்கலத்தை அனுப்பி சிறுகோளை திசை திருப்பும் நாசா: டார்ட் ஆரம்பம்!
பூமிக்கு அருகில் உள்ள சிறுகோளை திசை திருப்ப நாசா டார்ட் என்ற விண்கலத்தை தயார் செய்துள்ளது. தூக்கிச் செல்லும் அம்சத்தோடு டார்ட் விண்கலத்தை நாசா தாயார் செய்திருக்கிறது. பூமிக்கு அருகில் வரும் சிறுகோளை திசை திருப்பும் பணியை இந்த விண்கலம் மேற்பார்வையிடும். சிறுகோள் என்பது பூமியை மோதினால் ஏற்படும் அழிவு என்பது நினைத்துக் கூட பார்க்கமுடியாத அளவிலானது இதுபோன்ற அபாயத்தில் இருந்து நம்மை காப்பாற்றும் பணியில் நாசா ஈடுபட்டு வருகிறது.

சிறுகோளை அழிப்பது சிரமம்
எக்ஸ்-கதிர்கள் அல்லது வேறு எதையும் வைத்து சிறுகோளை அழிக்கவோ அல்லது ஆவியாக்கவோ இயலாது. இருப்பினும் புத்திசாலதித்தனமாக நாசா அதை திசை திருப்புவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது. டார்ட் திட்டத்தின் மூலம் இதை செய்ய முடியும். இந்த விண்கலம் தற்போது தயாராக இருக்கிறது.
டார்ட் விண்கலம்
டார்ட் விண்கலம் கியூப்சாட் கூறுகளை எடுத்து ஆராய்ந்து வருகிறது. இந்த அம்சத்தின் மூலம் சிறுகோள் தாக்கத்தின் 10 நாட்களுக்கு முன்பு நிலைநிறுத்தப்படும். நாசாவின் டார்ட் பணி தற்போது லான்ச் பேடை நோக்கி செல்கிறது. டார்ட்-ன் குறிக்கோள் குறித்து பார்க்கையில், 15000 மைல் வேகத்தில் பறக்கும் சிறுகோளை திசைதிருப்ப நம்பகமான நுட்பமாக இது தீர்மானிக்கப்படுகிறது.
டிடிமோஸ் மற்றும் டிமோர்போஸ்
கியூப்சாட் தாக்கத்திற்கு 10 நாட்களுக்கு முன்பு இந்த பயன்பாடு தன்னை பிரித்து மணிக்கு 2.5 மைல் வேகத்தில் பயணிக்கும் எனவும் இதன் தாக்கத்தை புகைப்படம் எடுக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் வரும்காலத்தை பொறுத்த வரையில் டிடிமோஸ் மற்றும் டிமோர்போஸ் பூமிக்கு அச்சுறுத்தலாக இல்லை என்று கூறப்படும் அதேசமயத்தில் பூமிக்கு அருகாமையில் இருப்பதால் விஞ்ஞானிகள் அதை கண்காணித்து வருகின்றனர்.

இரட்டை சிறுகோள் திசைதிருப்புதல் சோதனை
DART (double asteroid redirection Test) என பெயர் குறிப்பிடுவது போல் இது இரட்டை சிறுகோள் திசைதிருப்புதல் சோதனை ஆக இருக்கிறது. விண்கலம் பூமியில் இருந்து சுமார் 109.4 கோடி கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் டிடிமோஸ் விண்கல் அமைப்பை நோக்கி அனுப்பப்பட இருக்கிறது.
ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ராக்கெட்
டார்ட் மிஷன் நவம்பர் இறுதியில் ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ராக்கெட்டில் ஏவப்படும் எனவும் இது ஒரு வருடத்திற்கு பிறகு அதாவது 2022-ல் அதன் இலக்கை எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 23 ஆம் தேதி டார்ட் விண்கலத்தை ஏவ நாசா திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது. பூமியின் அபாயகரமான சிறுகோள் தாக்குதல்களில் இருந்து தடுக்க உதவும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்க நாசா திட்டமிட்டிருக்கிறது.

ஆபத்தான இரட்டை சிறுகோள்
ஆபத்தான இரட்டை சிறுகோளை திசை திருப்ப சோதனை செய்ய விண்கலம் திட்டமிட்டிருக்கிறது. இந்த விண்கலம் நவம்பர் 24 அன்று தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அபாயகரமான சிறுகோள் தாக்குதல்களில் இருந்து பூமியை பாதுகாக்க உதவும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்க நிறுவனம் திட்டமிட்டது. ஒரு மாதத்திற்கும் மேலாக திட்டமிடப்பட்ட இந்த விண்கலம் கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளி படை தளத்தில் இருந்து எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ்-ன் பால்கன் 9 ராக்கெட் மூலம் ஏவப்பட இருக்கிறது.

மிகப்பெரிய அபாயங்களில் ஒன்று- சிறுகோள்
நாசா இறுதியாக பூமியை எதிர்கொள்ளும் மிகப்பெரிய அபாயங்களில் ஒன்று- சிறுகோள் மோதல் ஆகும். 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சிறுகோள் ஒன்று மோதியதாகவும் அதில் டைனோசர்கள் இனமே அழிந்ததாகவும் பல ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. டார்ட் பணியானது அதன் சோதனை முழுமை அடைவதற்கு முன்பு அதன் இறுதி கட்ட வளர்ச்சியை அடைந்திருக்கிறது. விண்கலம் பூமியில் இருந்து சுமார் 109.4 கோடி கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் டிடிமோஸ் விண்கல் அமைப்பை நோக்கி அனுப்பப்பட இருக்கிறது.

அதிகாரப்பூர்வ வலைதளங்களில் ஸ்ட்ரீமிங்
நாசாவின் தகவலின்படி ஆபத்தான விண்கலம் 24140 கிலோமீட்டர் வேகத்தில் மோத திட்டமிட்டிருக்கிறது. ஆர்வமுள்ள பார்வையாளர்கள் நவம்பர் 24 ஆம் தேதி காலை 10:50 மணிக்கு நேரடி ஸ்ட்ரீமிங்கை ட்யூன் செய்யப்படும் என கூறப்படுகிறது. இது நாசா பயன்பாடு மற்றும் அதன் அதிகாரப்பூர்வ வலைதளம் உள்ளிட்ட அதன் தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
File Images


Click it and Unblock the Notifications