Home
News

அட இந்த 12 நகரங்களுக்கு இப்படி ஒரு ஆபத்து வருமா? நாசா தகவல்.!

நாசா அமைப்பு அண்மையில் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி காலநிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் 12 முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக நாசா கூறியள்ளது. மேலும் இதுசார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏற்பட வாய்ப்பு உள்ளது

ஏற்கனவே உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில் காலநிலை மாற்றம் காரணமாகஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என நாசா அமைப்பு தெரிவித்துள்ளது.

 மாற்றம் காரணமாக புவி

அதாவது காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்து வருகிறது. குறிப்பாக உலகளாவிய சராசரி கடல் மட்டம் ஆண்டுக்கு 3.7 மில்லிமீட்டர் விகிதத்தில் உயர்ந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரங்கள் சராசரியாக 3 மீட்டர் அளவு நீரக்குள் மூழ்கும் அபாயம்

மேலும் காலநிலை மாற்றம், கடல் நீர் மட்டம் உயர்வது குறித்த தரவுகளை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. அதன்படி நாசா வெளியிட்ட தகவல் என்னவென்றால், 2100-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் முக்கிய கடலோரப் பகுதியில் இருக்கும் 12 நகரங்கள் சராசரியாக
3 மீட்டர் அளவு நீருக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

றிப்பாக 3 மீட்டர் அளவு நீருக்குள்

குறிப்பாக 3 மீட்டர் அளவு நீருக்குள் மூழ்கும் அபாயத்தில் இருக்கும் நகரங்கள் இவை தான், குஜராத் மாநிலத்தில் கண்ட்லா, ஒக்ஹா,பவுநகர், மும்பை, கோவாவின் மோர்முகாவ், கர்நாடகாவின் மங்களூர், தமிழ்நாட்டின் சென்னை, தூத்துக்குடி, கேரளாவின் கொச்சி, ஒடிசாவின் பரதீப், கொல்கத்தாவின் கிதிர்பூர், ஆந்திராவின் விசாகப்பட்டினம். இந்த 12 நகரங்கள் நாசா வெளியிட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.

த தகவல் தற்போதைய கால

அதபோல் இந்த தகவல் தற்போதைய கால நிலையின் அடிப்படையல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை மாறும் பட்சத்தில் கடல்நீர் மட்டம் உயரும் விகிதத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என நாசா அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக மனிதர்கள் சூற்றுச்சூழலில் ஏற்படுத்தியுள்ள மோசமான பாதிப்பே இதற்கு காரணம் என நாசா தெரிவித்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்ப

மேலும் நாசா அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. அதன்படி நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் உயிரனங்கள் வாழ்ந்ததா இல்லை உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்புள்ளதா என ஆய்வு செய்து வருகிறது. அப்படி உயிரினங்கள் வாழ முடியும் என சாத்தியக்கூறுகள் கண்டறியும் நிலையில் அங்கு மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
NASA reports many Indian cities will be underwater by 2100: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X