Home
News

செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படத்தை வெளியிட்ட நாசா: இணையத்தில் வைரல்.!

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் இந்த அமைப்பு விண்வெளி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிடுகிறது.

 Crater புகைப்படங்கள் என்று

மேலும் நாசா அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியல் அதிகம் வைரலாகி வருகிறது. அதாவதுசெவ்வாய் கிரகத்தில் இருந்து, புகைப்படம் ஒன்றை நாசா சமீபத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இதனைக் கண்ட நெட்டிசன்களுக்கு ஆச்சரியத்தை
ஏற்படுத்தியுள்ளது. அந்த புகைப்படம் செவ்வாய் கிரகத்திலுள்ள Crater புகைப்படங்கள் என்று கூறப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தில் இருக்கும் நாசாவின்

குறிப்பாக நிலா, கிரகம், கோள்கள் என அனைத்திலும் அதிகம் குழிகள் காணப்படும். அப்படி தோன்றும் குழிகளை Crater என குறிப்பிடுவார்கள். அதன்படி செவ்வாய் கிரகத்திலுள்ள ஒரு குழியின் புகைப்படம் ஒன்றை தான் தற்போது நாசா வெளியிட்டது.

 Mars Reconnவின்

குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் இருக்கும் நாசாவின் Mars Reconnaissance Orbiter-ல் அமைந்துள்ள High-Resolution Imaging Science Experiment (HiRISE) எனும் அதிநவீன கேமரா மூலம் இந்த அசத்தலான புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் அமைந்திரு

செவ்வாய் கிரகத்தில் அமைந்திருக்கும் இந்த குழிகள், சரியாக ஜீரோ டிகிரி தீர்க்கரேகையில் அமைந்துள்ளது. பின்பு செவ்வாய் கிரகத்தின் இந்த Crater புகைப்படம், ஒரு பிக்சலுக்கு 50 செ.மீ என்ற அளவில் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த புகைப்படத்தில் நாம் பார்ப்பதை விட நிஜத்தில் இந்த குழி பல மடங்கு பெரிதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்இதைப் பார்க்க ஒரு ஏலியனின் கால் தடம் போலவே தோன்றுகிறது. குறிப்பாக இந்த செவ்வாய் கிரகத்தில் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள்அரண்டு போனார்கள். மேலும் சிலர் செவ்வாய் கிரகத்தில் பெரிய ஏலியனின் கால்தடம் போல் இந்த குழிகள் உள்ளதாக குறிப்பிட்டு வருகின்றனர்.

 அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா மற்றும் சில

அதேபோல் அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா மற்றும் சில நாடுகள் இணைந்து விண்வெளி ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்தை வடிவமைத்தன. குறிப்பாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இதுவரை அமெரிக்கா, ரஷ்யா உட்பட 15 நாடுகளுக்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வுகளை நடத்தி விட்டு திரும்பி வந்துள்ளனர். துவக்கத்தில் இந்த சர்வதேச விண்வெளி நிலையம் 15 ஆண்டுகள் வரை மட்டுமே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அதன்பின்பு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுகப்பட்டது. இந்நிலையில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தின் செயல்பாடு வரும் 2031 ஆண்டுடன் நிறைவு பெறும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா சமீபத்தில் தெரிவித்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையமான ISS இல்

சர்வதேச விண்வெளி நிலையமான ISS இல் தொடர்ந்து பல விதமான கோளாறுகள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக காலாவதியான உபகரணங்கள் மற்றும் வன்பொருள் போன்றவற்றின் மூலம் விண்வெளி நிலையத்தில் பல கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இன்னும் சில காலத்தில் "சரிசெய்ய முடியாத" அளவிற்குத் பிரச்சனைகளைசந்திக்க நேரிடும் என்று ரஷ்ய அதிகாரிகள் எச்சரித்தனர். எனவே இதை தொடர்ந்து தான் சர்வதேச விண்வெளி நிலையத்தை பூமிக்கு திரும்ப பெறும் நடவடிக்கை குறித்து நாசா ஆய்வு செய்து வருகிறது.

வரும் 2031 ஜனவரியில் சர்வதேச

குறிப்பாக வரும் 2031 ஜனவரியில் சர்வதேச விண்வெளி நிலையம் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைவது குறித்து விஞ்ஞானிகள் திட்டமிட்டு வருகின்றனர். அதாவது பூமிக்கு திரும்பும் சர்வதேச விண்வெளி நிலையம், பாயிண்ட் நெமோ எனப்படும் தெற்கு பசிபிக் பெருங்கடலில் மக்கள் வசிக்காத பகுதியில் கடலில் மூழ்கடிக்கப்படும் என நாசா சார்பில் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பாயிண்ட் நெமோ என்பது பசிபிக் கடலில் உள்ள புள்ளியாகும். இது நிலத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளதுமற்றம் பல விண்கலங்களுக்கு இது நீர் கல்லறையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
NASA releases New photo of Mars: viral on the Internet: Here is the list!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X