Just In
- 5 hrs ago சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- 6 hrs ago ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- 7 hrs ago Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- 7 hrs ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
செவ்வாய் போன்ற சூழலில் வாழ ஆசையா? நாசா செய்த பிரமாண்ட ஏற்பாடு.! "இவர்கள்" மட்டும் விண்ணப்பிக்கலாம்.!
விண்வெளி பயணம் என்பது இப்போது மிகவும் சூடான தலைப்பாக மாறிவிட்டது. அமெரிக்கா போன்ற முன்னணி நாடுகள், விண்வெளி பயணத்தில் புதிய சாதனை படைக்க போராடி வருகிறன. செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை வாழ வைப்பதற்கான முயற்சிகளை நாசா நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது செவ்வாய் கிரகம் போன்ற சூழலில் ஒரு வருடம் வாழ நாசா நான்கு மனிதர்களைத் தேடி வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை நாசா தற்போது ஏற்கத் தொடங்கியுள்ளது.
அரசாங்கத்தின் கைகளில் இருந்து தனியார் கைகளுக்கு மாறிய விண்வெளி பயணம்
விண்வெளி பயணம் என்பது அரசாங்கத்திடம் இருந்து இப்போது தனியார் பக்கம் திரும்பியுள்ளது. அரசாங்கத்தின் ஆராய்ச்சி மையங்கள் போக, இப்போது எலான் மஸ்க் போன்ற தனியார் நிறுவனத் தலைவர்கள் தற்போது விண்வெளி ஆராய்ச்சியில் கூடுதல் ஆர்வம் காட்டி வருகின்றனர். விண்வெளி பயணம் என்பது அதிக செலவுடையது என்றாகிவிட்டது. ஒருமுறை விண்வெளி சென்று வரும் பயணத்திற்கே சமீபத்தில் 1 மில்லியன் டாலருக்கும் மேல் கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய் கிரகத்தில் உயிர்வாழக்கூடிய சாத்தியங்களை ஆராய்ச்சி செய்யும் நிறுவனங்கள்
இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில், நம்மில் பெரும்பாலோர் விண்வெளி பயணத்தை அனுபவிக்க மாட்டோம் என்பது தெளிவாகிறது. இருப்பினும், இப்போது நாசா உங்களுக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் உயிர்வாழக்கூடிய சாத்தியங்களை அறிவதற்கான சோதனையை மேற்கொள்ள நான்கு புதிய நபர்களை நாசா தேர்வு செய்யவுள்ளது. பயப்பட வேண்டாம், உங்களை நாசா உண்மையில் செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பப்போவதில்லை.
செவ்வாய் போன்ற சூழலில் வாழ ஆசையா?
செவ்வாய் கிரகம் போன்ற சூழலில் உங்களை வாழவைத்து சோதனை நடத்தப்போகிறது. உண்மையை சொல்லப் போனால் இது ஒரு பாசாங்கு சோதனையாகும். இந்த சோதனை ஒரு வருடத்திற்கு நடத்தப்படும். செவ்வாய் கிரகத்தைப் போன்ற சூழலில் ஒரு வருடம் வாழத் தயாராக இருக்கும் ஆட்களை நியமிக்க நாசா திட்டமிட்டுள்ளது. இதற்கான சம்பளமும் விண்வெளி பயணத்தின் கட்டணம் போல் கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒப்பந்தத்திற்கான விண்ணப்பங்களை நாசா ஏற்கத் துவங்கியுள்ளது.
"மார்ஸ் டியூன் ஆல்பா" என்ற ஒரு வருட சோதனை திட்டம்
விண்வெளி நிறுவனம் "மார்ஸ் டியூன் ஆல்பா" என்று அழைக்கப்படும் ஒரு வருடம் வாழ விரும்பும் நபர்களுக்கான விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியது . நீங்கள் உண்மையில் ஹூஸ்டனில் ஜான்சன் விண்வெளி மையத்தில் 3D-யில் அச்சிடப்பட்ட 1,700 சதுர அடி "செவ்வாய் கிரகம் போன்ற வாழ்விடத்தில்" வசிப்பீர்கள். ஆனால், அது அடிப்படையில் செவ்வாய் கிரகம் அல்ல, செவ்வாய்க் கிரகம் போல் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு வாழ்விடம்.
நான்கு தன்னார்வலர்களை நாசா தேர்ந்தெடுக்க நாசா திட்டமா?
இந்த சோதனையின் மூலம், செவ்வாய் கிரக சூழலில் மனிதர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள விரும்புகிறோம் என்று முன்னணி விஞ்ஞானி கிரேஸ் டக்ளஸ் கூறியுள்ளார். நாங்கள் செவ்வாய் யதார்த்தமான சூழ்நிலைகளைப் பார்க்கிறோம் என்று கூறியுள்ளார். இந்த அனுபவத்தில் பங்கேற்க நான்கு தன்னார்வலர்களை நாசா தேர்ந்தெடுக்கும். இந்த சோதனையில் ஏராளமான விண்வெளி அனுபவத்தை அவர்கள் அனுபவிக்க வேண்டும் என்று நாசா கூறியுள்ளது.
தேர்வில் நீங்கள் இந்த சிக்கலை எல்லாம் சந்தித்தாக வேண்டுமா?
செவ்வாய் கிரக ஆய்வுப் பயணங்கள் போன்ற வேடிக்கையான விண்வெளி வீரர்களின் நடவடிக்கைகள் மற்றும் தடைசெய்யப்பட்ட உணவு மற்றும் வளங்கள், உபகரணங்கள் செயலிழப்புகள் மற்றும் வீட்டிலுள்ள மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட தகவல்தொடர்புகள் போன்ற வேடிக்கையான விண்வெளி வீரர்களை உள்ளடக்கிய ஒரு கடினமான சோதனையாக இது இருக்கும் என்று நாசா கூறியுள்ளது. அடுத்த ஒரு வருடத்திற்கு இவர்கள் சாப்பிடத் தயாராக இருக்கும் விண்வெளி உணவுகளை மட்டுமே சாப்பிட முடியும்.
உள்ளே வரோம்., ஒதுங்கி நில்லு- ரூ.1399 மட்டுமே: இந்தியாவில் பிலிப்ஸ் அறிமுகம் செய்த 3 புதிய செல்போன்!
ரஷ்யா நடத்திய 'மார்ஸ் 500' என்ற சோதனை என்ன ஆனது?
பாசாங்கு விண்வெளி குமிழுக்குள் ஒரு சில செடிகள் வளர்க்கப்படும் ஆனால் அதிகம் எதிர்பார்க்க வேண்டாம். இதுபோன்ற சோதனைகளை விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் முயற்சிப்பது இது முதல் முறை அல்ல. கடந்த காலத்தில் 'மார்ஸ் 500' என்றழைக்கப்படும் இதேபோன்ற சோதனை பணியை ரஷ்யா முயன்றது. இருப்பினும், சோதனை வெற்றிகரமாக இல்லை, எனவே நாசாவுக்கு நல்ல இது ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பாக அமைய வாய்ப்புள்ளது. இந்த சோதனையில் யாரெல்லாம் பங்கேற்க முடியும் என்பதை இப்போது பார்க்கலாம்.
நாசாவின் இந்த சோதனைக்கு யாரெல்லாம் தகுதியானவர்கள்?
இந்த சோதனைகள் பல கட்டங்களாகத் திட்டமிடப்பட்டுள்ளன, இதன் முதல் தொகுப்பு வரும் 2022 இலையுதிர்காலத்தில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசா சிறந்தவற்றில் சிறந்ததைத் தேடுகிறது. இதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அறிவியல், பொறியியல் அல்லது கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பது கட்டாயம் என்று நாசா தெரிவித்துள்ளது. பைலட் அனுபவம் இருப்பது ஏற்கத்தக்கது. இந்த சோதனை நிரந்தர அமெரிக்க குடியிருப்பாளர்கள் அல்லது அமெரிக்க குடிமக்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு திறந்திருக்கப்பட்டுள்ளது என்பது வேதனை.
இந்தியாவில் கூட ஏராளமான திறமைசாலிகள் குவிந்திருக்கிறோம்
மேலும் விண்ணப்பதாரர்கள் 30 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்றும், உணவுக் கட்டுப்பாடுகள் அல்லது இயக்க நோய் உள்ளவர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும் நாசா கூறியுள்ளது. மிகவும் திறமையானவர்களாகவும், திறமைசாலிகளாகவும் இருக்கும் நபர்களுக்கு வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல் இஸ்ரோவும் நமக்கு இப்படி ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தால் அருமையாக இருக்கும். நமது ஊரிலும் ஏராளமான திறமைசாலிகள் குவிந்துள்ளனர்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470