கொரோனா வைரஸ் அச்சத்தையும் தாண்டி விண்வெளி சென்ற இருநாட்டு வீரர்கள்.!
கொரோனா வைரஸ் பாதிப்பால் வல்லரசு நாடான அமெரிக்கா விழிபிதுங்கி நிற்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அமெரிக்காவில் தான் அதிக அளவில் காணப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில், 435,128 பேருக்கு கொரோனா
பாதிப்பு காணப்படுகிறது. கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் மட்டும் 14,795-பேர் பலியாகியுள்ளனர் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

கொரோனா பாதிப்பால், அமெரிக்காவில் வசித்து 11 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 16 இந்தியர்களுக்கு கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்த அனைத்து இந்தியர்களும் ஆண்களே ஆவர். பலியானவர்களில் 4 பேர் டாக்ஸி ஓட்டுநராக அமெரிக்காவில் பணிபுரிந்து வந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் இந்த இக்கட்டனா நிலையிலும் இரு நாடுகளின் விண்வெளி வீரர்கள் நேற்று சோயூஸ் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளிக்கு புறப்பட்டு சென்றனர்.

குறிப்பாக அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா விண்வெளி வீரர்கள் கிறிஸ்கேஸி உள்ளிட்ட வீரர்கள்கஜகஸ்தானில் உள்ள பைகனூர் விண்வெளி மையத்திலிருந்து சர்வதேச விண்வெளி ஆரய்ச்சி மையம்சென்றனர்.
குறிப்பாக விண்கலம் புறப்பட்ட வீடியோ காட்சியை நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் பதவிவேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா பாதிப்பு இரு நாடுகளிலும் அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக விண்வெளி வீரர்கள் கடும்கட்டுபாடுகளுடன் தங்களை தாங்களாகவே தனிமைப்படுத்தப்படுதிக்கொண்டனர்.

ஆனால் இவர்கள் தற்போது வரை நல்ல உடற்தகுதி இருந்ததையடுத்து விண்வெளிக்கு பயணமாயினர் என நாசாவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா விண்வெளி வீரர்Chris Cassidy, ரஷ்ய விண்வெளி ஆய்வாளர்கள் Anatoly Ivanishin மற்றும் Ivan Vagner உள்ளிட்டவீரர்கள் கஜகஸ்தானில் உள்ள பைகனூர் விண்வெளி மையத்திலிருந்து சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் சென்றனர் என்பது குறிப்பிடத்தகக்து.

ஆனால் ஏற்கனவே சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியுள்ள ரஷ்ய, அமெரிக்க விண்வெளி வீரர்கள் மூன்றுபேர் அங்கிருந்து புறப்பட்டு பூமிக்கு வரும் ஏப்.17-ம் தேதி திரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications