நாசாவின் ஸ்பேஸ் ரோபாட்டிக்ஸ் சேலன்ஜ், கலக்கப்போவது யார்..?!
உலகின் மிகவும் எதிர்பார்க்கப்படும் மற்றும் பேசப்படும் விண்வெளி ஆய்வுகளில், நாசாவின் செவ்வாய் கிரக பயணமும் ஒன்றாகும். நாசாவின் பெரிய இலக்கான செவ்வாய் கிரகம் மற்றும் அதன் புவியில் உயிர்களின் புழக்கத்தை கண்டுபிடிக்கும் ஆய்வு முயற்சியை 2020-குள் அடைய நாசா அயராது உழைத்து வருகிறது.

செவ்வாய் கிரக பயணத்தின் மற்றொரு நடவடிக்கையாக அமெரிக்க விண்வெளி நிறுவனம் ஒரு புதிய போட்டியை நிகழ்த்தவுள்ளது. அது - விண்வெளி எந்திரியறிவியல் சவால், நாசாவின் பணி திட்டங்களை வடிவமைப்பதில் பங்களிக்கத் தகுந்த ஸ்பேஸ் ரோபாட்டிக்ஸ் சவால்.

இதன் மூலம் செவ்வாய்க்கு பயணிக்க தகுந்த, திறன்மிக்க மனித உருவுடைய விண்வெளி ரோபோகளை உருவாக்க நாசா திட்டமிட்டுள்ளது. இந்த சவாலில் பங்கு பெரும் அணிகள் சிக்கல்களை சமாளிக்கும் வண்ணம் திறன் கொண்ட மெய்நிகர் ரோபோ மாதிரியை சமர்பிக்க வேண்டும், பின்னர் அது நாசாவின் 5 அடி உயர ரோபோனட் 5 (ஆர்5) ஆக உருமாற்றப்படும்.

மெய்நிகர் இறுதி போட்டியானது ஜூன் 2017-ல் நடைபெரும் மற்றும் ஜூன் இறுதியில் வெற்றியாளர்கள் யார் எனபது ஹூஸ்டன் விண்வெளி மையத்தில் அறிவிக்கப்படும். வெற்றியாளர்கள் 1 மில்லியன் டாலர்கள் பரிசுத்தொகை பெறுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க :
சாத்தியமே : கிழிந்தால் 'காயம் போல தானாக ஆற்றிக்கொள்ளும்' துணி வகை..!
கென்னடி வழங்கிய 'சலுகையை' நேரு மறுத்தது ஏன்..?
இப்புகைப்படங்கள் எங்கு எடுக்கப்பட்டவைகள் என்று சொன்னால் நம்புவீர்களா.?


Click it and Unblock the Notifications