Just In
- 1 hr ago சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- 3 hrs ago நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- 3 hrs ago OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- 4 hrs ago AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
Don't Miss
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இலங்கையில் முகாமிட்ட ஏலியன்கள்- தமிழர்களுடன் உறவு?
ராமர் படையெப்பும்- இலங்கையை ஆண்ட ராவணணின் ஆட்சியிலும் இன்று வரை இலங்கையில் பெரும் மர்மம் நீடித்தாகவே இருக்கின்றது. இந்நிலையில் இலங்கையில் தற்போது ஏலியன்கள் முகாமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரு
புராண காலங்கள் முதல் இன்று வரை இலங்கை பல்வேறு மர்மங்களை கொண்டுள்ளது. இன்று வரை இலங்கையில் சிகிரியா மலைத் தொடர்களும் மர்மம் நிறைந்ததாகவே காணப்படுகின்றது.
ராமர் படையெடுப்பும்- இலங்கையை ஆண்ட ராவணணின் ஆட்சியிலும் இன்று வரை இலங்கையில் பெரும் மர்மம் நீடித்தாகவே இருக்கின்றது.
இந்நிலையில் இலங்கையில் தற்போது ஏலியன்கள் முகாமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ராமாய காலம்:
இலங்கை நான்கு பக்கம் கடல் சூழ்ந்த பகுதியாக இருக்கின்றது. இன்றும் கடல் பகுதியால் மறைந்தே காணப்படுகின்றது. இந்து மகா கடலும், வங்காள விரிகுடாவும், அரபிக் கடலும் சங்கமிங்கும் இடத்தில் இலங்கை தொங்கி கொண்டிருக்கின்றது.
தமிழர்களின் உறவு:
ஆனால் இன்றுவரை இலங்கைக்கும் தமிழர்களுக்கும் நீண்ட உறவாக இலங்கை இருக்கின்றது. சிங்களர்களின் வருகைக்கு முன்பே இலங்கை தமிழர்கள் வசித்துள்ளனர். கடவுள் முருகன் கதிர்கிராமத்தில் தமிழர்களுக்கு உழவு செய்யும் தொழிலை பழக்கியுள்ளார். சிங்களான விஜயன் ஓடிசா பகுதியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டதால், இலங்கை சென்ற போது அங்கு மரத்தடியில் பதுமைபோல் இருந்த குவேனி என்னும் தமிழச்சி அழகில் மயங்கி திருமணம் செய்து கொள்கின்றான்.
ராமாயணம்:
ராமாயண காவியல் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சென்றதாக எழுத்தப்பட்டுள்ளது. காவியத்தில் சொலப்பட்டுள்ள இடங்களும் இன்று இலங்ககையில் காணப்படுகின்றது. மேலும், ராவணன் ஆண்ட பகுதியும் இருக்கின்றது. ராவணன் அப்போதே 24 வகையான விமானங்களையும் பயன்படுத்தியுள்ளான். இதை வரலாற்று ஆய்வாளர்களும் ஏற்றுக்கொள்கின்றனர்.
சிகிரியாமலை:
ராவணன் காலத்தில் போர் விமானங்கள் மற்றும் விமான தளங்கள் நிறைந்ததாகவே சிகிரியா மலை இருக்கின்றது. இந்த மலையின் மீது உள்ள தடயங்கள் பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்களையும் அதிரவிட்டுள்ளது.
இதை இலங்கை அரசு வரலாற்று பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றது. இந்த மலையில் பல்வேறு மர்மம் நிறைந்த பகுதியாகவே இருந்து வருகின்றது.
அந்த பகுதியில் ஏலியன்கள் நடமாட்டம் இன்று வரை இருப்பதாக கூறப்படுகின்றது. பல்வேறு மர்மம் நிறைந்த பகுதியாகவே இன்று வரை சிகிரியா மலைத்தொடர் காணப்படுகின்றது.
இரவு நேரங்களில் மர்ம ஒலி:
சிகிரியா மலைத்தொடர் மட்டும் இல்லாமல் அதன் பகுதியில் இரவு நேரங்களில் பறக்கும் தட்டுகளில் அப்பகுதியை சுற்றிவருவதாக கூறப்படுகின்றது. அங்கு ஒரு சில ஓசைகளும் கேட்பதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இன்று வரை இலங்கை வரலாற்றுகளில் முக்கிய இடம் பிடித்து இருந்தாலும் முக்கியமானதாக காணப்படுகின்றது.
விளைநிலத்தில் ஏலியன் முகாம்:
அந்நாட்டின் அம்பாறை மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில் கடந்த 2-ம் தேதி சோள பயிர் பாதுகாப்புக்கு சென்ற கருணாதிலக்க என்ற விவசாயி, இரண்டடி உயரமும், நீண்ட தலைமுடியும், சிவந்த முகமும் கொண்ட ஒரு விசித்திர உருவம் வயலுக்குள் நடந்து செல்வதை கண்டதாக மிரண்டு ஓட்டம் பிடித்தார். ஊரில் உள்ளவர்களை அழைத்து வந்து பார்த்த போது, அங்கு யாரும் இல்லை.
பறக்கும் தட்டு பயணம்:
இதன்பின்னர் சிலநாட்கள் கழித்து, அனுராதபுரம், பொலநறுவா ஊர்களுக்கு அருகில் இரவு வெளிச்சமான பொருள் ஒன்று தரையிறங்கியதை பலரும் பார்த்ததாக தெரிவித்துள்ளனர். இது பறக்கும் தட்டாக இருக்கலாம் என அங்கு ஆய்வு நடத்திய அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த இரண்டு தகவல்களையும் இணைத்து பரவும் தகவல்களால் இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழர்களுடன் உறவு:
தமிழர்களின் வாழும் பகுதியில் தொடர்ந்து ஏலியன்கள் சுற்றிரித்திரிக்கின்றன. மேலும் அவர்கள் தமிழர்களுடன் நீண்ட தொடர்பில் இருந்து இருக்கலாம் என்றும் ஒருசிலர் கருதுகின்றனர். இரவு நேரங்களில் வேற்றுகிரங்களில் இருந்து வந்து ஏலியன்கள் தனக்கு நெருங்கியவர்களுடன் தொடர்பில் இருக்கலாம் என்று கருதுகின்றனர்.
சில்வண்டு சிக்கும் சின்னதம்பி சிக்கமாட்டான்- கெத்தும் காட்டும் யானை.!
கோவையில் இருந்து பொள்ளாச்சி டாப்சில் வனப்பகுதிக்கு பிடித்து செல்லப்பட்டது காட்டு யானை சின்னத்தம்பி. தனது இடத்தை தேடி வேறு வழியில் சென்றுக் கொண்டிருக்கின்றது. ஏற்கனவே யானைக்கு ரேடியோகாலர் பொறுத்தப்பட்டதால், சின்னத்தம்பியிடன் இறுப்பிடத்தை வனத்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.இருந்த போதும் கும்கி யானைகளுக்கும் தனது சிக்காமலும், ரேடியோ காலர் பொறுத்தப்பட்ட நிலையில் தான் எப்போதும் செய்யும் சேட்டைகளை செய்து வருகின்றது. இது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்த போதும், யானையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திக்கு முக்காடி வருகின்றனர். சில்வண்டு சிக்கும் இந்த சின்னத்தம்பி சிக்காமாட்டான் போல் கெத்து காட்டி வருகின்றது.
கோவையில் பிடிக்கப்பட்ட விநாயகன்:
கோவை மாவட்டம் வரப்பாளையம், பெரிய தடாகம் பகுதிகளில் கடந்த 6 மாதமாக இரண்டு காட்டு யானைகள் சுற்றித் திரிந்தன. இவற்றுக்கு விநாயகன், சின்னத்தம்பி எனப் பெயரிடப்பட்டது. இந்த யானைகள் விளைநிலத்தை சேதப்பத்தியதாக விவசாயிகள் தொடர்ந்து புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் பெரிய தடாகம் அருகே விநாயகன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி கும்கிகள் உதவியுடன் வாகனத்தில் ஏற்றி நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பகுதிக்குள் விடப்பட்டது யானை விநாயகன்.
சின்னத்தம்பி மிஸ்ங்:
விநாயகன் யானை பிடிக்கப்பட்ட போது, யானை சின்னத்தம்பி மட்டும் தப்பித்து சென்றுள்ளது. அவ்வப்போது, விளைநிலத்தில் மட்டும் இறங்கி தின்று இதையும் பிடி க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்த யானையால் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படவில்லை. வனத்தை காக்கும் விலங்குகள் யானை. கேரளாவில் இருந்தும் மற்ற யானைகள் நுழையாமல் விநாயகன், சின்னத்தம்பி தடுத்து வந்தன. சின்னத்தம்பியை பிடிக்க வேண்டாம் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சின்னத்தம்பி பிக்கப்பட்டது:
தடாகம் பகுதியில் சுற்றித்திரிந்த யானை சின்னத்தம்பியை கடந்த 25ஆம் தேதியன்று மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மயக்க ஊசி செலுத்தி சின்னத்தம்பியைப் பிடிக்க உதவினர். வாகனத்தில் ஏற்றப்பட்டபோது, யானையின் தந்தங்கள் உடைந்தன. அதற்காக, மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதையடுத்து, கோவை டாப்சிலிப் வனப்பகுதியில் அது விடப்பட்டது. சின்னத்தம்பி யானையின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில், அதன் கழுத்தில் ஜிபிஎஸ் கருவியையும் தமிழக வனத் துறையினர் பொருத்தியிருந்தனர்.
டாப்சிலிப் பகுதியில் விடப்பட்டது:
பிறகு வனத்துறை லாரி மூலம் சின்னத்தம்பி பொள்ளாச்சி அருகேயுள்ள டாப்சிலிப் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. பிறகு வனத்துறையினர் ஜிபிஎஸ் (ரேடியோ காலர்) உதவியுடன் கண்காணித்து வந்தனர். இருந்த போதும், அது பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலகுறிச்சி வனப்பகுதிக்குள் நுழைந்தது. பிறகு அங்கியிருந்து உடுமலை நோக்கி விளைநிலத்தில் உணவு, தண்ணீர் இல்லாமல் சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் சென்றது.
ரேடியோ காலர்:
வன விலங்குளின் இருப்பிடத்தை தெரிந்து கொள்ளவும் வனவிலங்குகளின் உடல் வெப்ப நிலை அதன் மூலம் கிடைக்கும் சிக்னல், வெப்சைட்டில் யானை நடமாட்டப் பகுதியை துல்லியமாக இந்த ரேடியோ காலர் மூலம் கண்காணிக்க முடியும். ரேடியோ காலர் ஆனது யானை, சிறுத்த, மான் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளுக்கும் வனத்துறையால் பொறுத்தப்படுகின்றது.
சின்னத்தம்பி சோர்வு:
உணவு மற்றும் தண்ணீல் எடுத்துக் கொள்ளாததால், சின்னத்தம்பி சேர்வடைந்துள்ளது. மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவ்வப்போது ரேடியோ காலர் மூலம் யானை இருப்பிடம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து யானைக்கு வனத்துறையினர் உணவு தரவும் முயற்சி செய்தனர். தற்போது அமராவதி வனப்பகுதிக்குள் சுற்றித்திரிகின்றது.
கும்கியாக மாற்றப்படும்:
நாட்டுப் பயிர்களை உண்டு பழக்கப்பட்டு விட்டதால்தான் சின்னதம்பி யானை காட்டுக்குள் செல்லமறுப்பதாக, தெரியவந்துள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். உலக ஈர நில தினத்தை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சின்னதம்பி யானைக்கு பாதிப்பு ஏற்படாமல் எச்சரிக்கையோடு பயிற்சி வழங்கி கும்கி யானையாக்கப்படும் என்றார்.
கும்மியாக மாற்ற எதிர்ப்பு:
சின்னத்தம்பியை கும்கியாக மாற்றக் கூடாது விலங்குகள் நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சின்னத்தம்பியை பிடிக்க இரண்டு கும்கிகள்:
ஒன்று மாரியப்பன் யானை, இன்னொன்று கலீம் யானை. இந்த இரண்டு யானைகளும்தான் முதலில் சின்னத்தம்பியை டாப்சிலிப் கொண்டு செல்ல உதவியது. தற்போது அதே யானைகளை மீண்டும் சின்னத்தம்பியை பிடிக்க வரவழைத்து இருக்கிறார்கள். உடுமலை கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்த யானைகள் இருக்கின்றன.
நட்பாக பழகியது:
கும்கி மாரியப்பனுடன் சின்னத்தம்பி நட்பாக பழகியது. இதை கண்ட அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர். பிறகு கொஞ்ச நேரத்திற்கு பிறகு இந்த யானை வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து விட்டது. ரேடியோ காலருடன் வேறு பகுதிக்குள் சென்றுவிட்டது. இதை வனத்துறையினர் பிடிக்க பல்வேறு முயற்சிகள் மேற் கொண்டு வருகின்றனர்.
ரேடியோ காலருடன் ஆட்டம்:
சின்னத்தம்பி வனப்பகுதி மற்றும் விளைநிலம் என மாறி மாறி ரேடியோ காருடன் ஆட்டம் காட்டி வருகின்றது. மேலும் பொது மக்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை. இருந்த போதும் வனத்துறையினர் பிடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
சில்வண்டு சிக்கும் சின்னதம்பி சிக்காதுலே.!
சில்வண்டு சிக்கும் இந்த சின்னத்தம்பி சிக்காதுலே என்று யானை சின்னதம்பி வனப்பகுதியில் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் நுழைந்து ஆட்டம் காட்டி வருகின்றது. இதனால் வனத்துறையினர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருகின்றனர்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470