இந்தியாவில் 'கூகுள் திட்டம்' உண்மை பின்னணி..!!
கூகுள் நிறுவனம் உலகம் முழுக்க பல்வேறு ரகசிய திட்டங்களில் பணியாற்றி ஆய்வு செய்து வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் கூகுள் நிறுவனம் இந்தியாவில் செயல்படுத்த இருக்கும் புதிய திட்டம் குறித்த விரிவான தகவல்களை தான் தெரிந்து கொள்ள இருக்கின்றீர்கள்..

ப்ராஜக்ட் லூன்
தடையில்லாமல் அதிவேக இண்டர்நெட் சேவையை வழங்க பலூன்களை பயன்படுத்தும் திட்டம் தான் கூகுளின் ப்ராஜக்ட் லூன்.

அனுமதி
ப்ராஜக்ட் லூன் திட்டத்தை இந்தியாவில் கட்டமைக்க கூகுள் நிறுவனம் மத்திய அரசின் அனுமதியை பெற்றுள்ளது.

பலூன்
இதன் மூலம் கூகுள் நிறுவனம் வாணில் பலூன்களை பறக்க விட்டு இண்டர்நெட் சேவையை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை
மேலும் குறைந்த விலையில் தடையில்லா இண்டர்நெட் சேவையை ப்ராஜக்ட் லூன் வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வாணம்
கூகுளின் ப்ராஜக்ட் லூன் பலூன்கள் வாணில் சுமார் 20 கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கவிட திட்டமிடப்பட்டுள்ளது.

இடம்
ஒவ்வொரு பலூனும் சுமார் 40 கிலோமீட்டர் வரை இண்டர்நெட் சேவையை வழங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சக்தி
இந்த பலூன்கள் சூரியன் மற்றும் காற்றின் மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

ஊராட்சி
ப்ராஜக்ட் லூன் திட்டமானது இந்தியாவின் ஊராட்சி பகுதிகளில் செயல்படுத்த முன்னுறிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தம்
இந்த திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்த கூகுள் நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

4ஜி வேகம்
ஒவ்வொரு பலூன் மூலம் பூமியில் சுமார் 40 கிலோ மீட்டர் பரப்பளவு வரை 4ஜி வேகத்தில் இண்டர்நெட் வழங்க முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா
ப்ராஜக்ட் லூன் மூலம் இண்டர்நெட் சேவை பெற்ற முதல் நாடு என்ற பெருமையை நியூசிலாந்து பெற்றுள்ளது. மேலும் இலங்கையிலும் ப்ராஜக்ட் லூன் கட்டமைக்க அந்நாடு அனுமதி அளித்திருப்பதாகவும், இலங்கையில் விரைவில் 100% இண்டர்நெட் சேவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications