இந்திய இளைஞருக்கு ரூ.1.2 கோடி சம்பளம் வாரி கொடுத்த கூகுள்.!
இவருக்கு சம்பளம் எவ்வளவு என்றால் ஒரு கோடியே 20 லட்சத்தை வாரி கொடுத்து அந்த இளைஞருக்கும் பெரும் மகிழ்ச்சியில் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஐஐடியை கல்வி நிறுவனத்தை சேராத இளைஞர் ஒருவர் கூகுள் நிறுவனம் நடத்திய பல்வேறு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று, பணி நியமன ஆணையை இந்திய இளைஞர் பெற்றுள்ளார்.

மேலும், இவருக்கு சம்பளம் எவ்வளவு என்றால் ஒரு கோடியே 20 லட்சத்தை வாரி கொடுத்து அந்த இளைஞருக்கும் பெரும் மகிழ்ச்சியில் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அப்துலா கான்:
மும்பையை சேர்ந்த அப்துலா கான், ஐஐடியில் சேர்வதற்காக நுழைவு தேர்வு எழுதியும், தோல்வி அடைந்ததால் ஸ்ரீ எல்ஆர் திவாரி பொறியியல் கல்லூரியில் தனது பி.இ- கணினி பொறியியல் படிப்பை தொடர்ந்தார்.

கூகுள் நேர்முக அழைப்பு:
சமீபத்தில் புரோகிராமிங் சேலஞ் ஒன்றின் மூலம் கானின் புரொபைலை பார்வையிட்ட கூகுள் நிறுவனம், நேர்காணலில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தது.

லண்டன் சென்றார்:
நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வுகளை எதிர்கொண்ட அவர், இறுதி தேர்வுக்காக லண்டன் சென்றார்.

ரூ. 1.2 கோடி சம்பளம் வழங்கிய கூகுள்:
அங்கு வெற்றிகரமாக செயல்பட்ட அவரை வருகிற செப்டம்பர் மாதம் லண்டன் அலுவலகத்தில் சேருமாறு பணிநியமன ஆணை வழங்கிய கூகுள் நிறுவனம், அவருக்கு ஆண்டு சம்பள தொகையாக ஒரு கோடியே 20 லட்சத்தை அறிவித்துள்ளது.

அதிக சம்பளம்:
வழக்கமாக ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் பயில்பவர்களுக்கு தான் கூகுள் போன்ற நிறுவனங்கள் இது போன்ற ஊதியத்தில் பணி வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது அதிக சம்பளமாகவும் இருக்கின்றது.


Click it and Unblock the Notifications